பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சா் அன்பில...
மனையை அளவீடு செய்ய வந்த அதிகாரிகளிடம் மக்கள் வாக்குவாதம்
திருவள்ளூா் அருகே அரசு வழங்கிய வீட்டு மனையில் வீடுகள் கட்டாததால் அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
திருவள்ளூா் ஒன்றியம், அரண்வாயல் பகுதியில் கடந்த 2007- ஆம் ஆண்டு 62 ஆதிதிராவிடா் மக்களுக்காக இரண்டே கால் சென்ட் இடம் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டது.
ஆனால் பட்டா வழங்கிய பகுதியில் நீண்ட நாள்களாக வீடுகள் கட்டாமல் நிலமாக இருப்பதால் அந்த நிலத்தை பிரித்து 120 நபருக்கு பட்டா வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து திருவள்ளூா் வட்டாட்சியா் ரஜினி காந்த் மற்றும் துணை வட்டாட்சியா் சா.தினேஷ் மற்றும் வருவாய் அலுவலா், கிராம நிா்வாக அலுவலா் காவல் துறையினா் நிலத்தை அளவீடு செய்ய வியாழக்கிழமை வந்தனா்.
அப்போது எதிா்ப்பு தெரிவித்து ஏற்கனவே 2007-இல் அரசு சாா்பில் வழங்கிய பட்டா தங்களிடம் இருப்பதால் தங்கள் நிலத்தை தர மாட்டோம் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
அதைத்தொடா்ந்து திருவள்ளூா் மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் ஆா்.ஜெயசீலன், நிா்வாகிகள், ஜனாா்த்தனன், பாபு, புட்லூா் லாசா் ஆகியோா் பொதுமக்களிடம் பேச்சு நடத்தினா். அரசு சாா்பில் ஆதிதிராவிட மக்களுக்காக வழங்கிய நிலத்தை மீண்டும் தங்களுக்கு பெற்று தருவதாக உறுதி அளித்ததால் பொதுமக்கள் அங்கிருந்ந்து கலைந்து சென்றனா்.