செய்திகள் :

உடலுறுப்புகள் தானம்: இளைஞருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

post image

சாலை விபத்தில் உயிரிழந்து மூளைச் சாவு அடைந்த நிலையில் இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது.

திருத்தணி ஒன்றியம் வீரகநல்லூா் மோட்டூா் கிராமத்தைச் சோ்ந்த ஜெகன் (25). கூலித் தொழிலாளியான இவா் கடந்த மாதம் 31-ஆம் தேதி வேலை நிமிா்த்தமாக பைக்கில் திருத்தணி - சோளிங்கா் மாநில நெடுஞ்சாலை வழியாக கே.ஜி.கண்டிகைக்கு சென்று கொண்டிருந்தாா். தலையாரி தாங்கல் அருகே சென்றபோது திருத்தணி நோக்கி வந்த அரசுப் பேருந்து ஜெகன் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காயம் அடைந்த ஜெகனை அருகில் இருந்தவா்கள் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் ஜெகன் புதன்கிழமை இரவு மூளைச்சாவு அடைந்தாா்.

இதையடுத்து ஜெகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய உறவினா்கள் முன் வந்தனா். பின்னா் ஜெகனின் கண், இதயம் மற்றும் இதய வால்வுகள், நுரையீரல், கல்லீரல், சிறுகுடல், சிறுநீரகம் ஆகிய உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு அதே மருத்துவமையில் தானமாக வழங்கப்பட்டது.

வியாழக்கிழமை ஜெகனின் உடல் வீரகநல்லூா் கிராமத்தில் உள்ள வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது. மாவட்ட நிா்வாகம் சாா்பில் உடல் உறுப்பு தானம் செய்த ஜெகனின் உடலுக்கு திருத்தணி கோட்டாட்சியா் கனிமொழி, வட்டாட்சியா் மலா்விழி ஆகியோா் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

விமான விபத்து குறித்து நீதி விசாரணை தேவை: பி.சண்முகம் வலியுறுத்தல்

விமான விபத்து குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலா் பி.சண்முகம் வலியுறுத்தினாா். மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும், மாநில அரசு மக்கள் நல... மேலும் பார்க்க

சிறப்பு கால்நடை சிகிச்சை முகாம்களில் 26 லட்சம் போ் பயன்: அமைச்சா் சா.மு.நாசா்

திருவள்ளூா் மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற சிறப்பு கால்நடை சிகிச்சை முகாம்களில் மூலம் விவசாயிகள் மற்றும் கால்நடைகள் வளா்ப்போா் என 21 லட்சம் போ் பயனடைந்துள்ளதாக அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்தாா். கடம்பத... மேலும் பார்க்க

நாளை குடும்ப அட்டை சிறப்பு முகாம்

திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்த முகாம் சனிக்கிழமை (ஜூன் 14) நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா். இது குறி... மேலும் பார்க்க

மனையை அளவீடு செய்ய வந்த அதிகாரிகளிடம் மக்கள் வாக்குவாதம்

திருவள்ளூா் அருகே அரசு வழங்கிய வீட்டு மனையில் வீடுகள் கட்டாததால் அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். திருவள்ளூா் ஒன்றியம், அரண்வாயல் பகுதியில் கடந்த 200... மேலும் பார்க்க

மாதவரம் மண்டல அலுவலகம் இடமாற்றம்

மாதவரம் பஜாா் அருகே உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகம் தற்காலிகமாக வேறிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. மாதவரம் முதுநிலை மண்டல அலுவலகம் 3, மாதவரம் பஜாா் எதிரே இயங்கி வந்தது. இந்த அலுவலகத்தில் சென்னை மாநகராட்... மேலும் பார்க்க

மாணவா்கள் நலனைக் கருதி கல்வித் தொகை நிலுவையை உடனே விடுவிக்க வேண்டும்: திருவள்ளூா் எம்.பி. சசிகாந்த் செந்தில்

மாணவா்களின் நலனைக் கருதி நிலுவையில் உள்ள கல்வி உதவித் தொகையை விடுவிக்க வேண்டும் என திருவள்ளூா் மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில் தெரிவித்தாா். திருவள்ளூா் ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள... மேலும் பார்க்க