செய்திகள் :

சிறப்பு கால்நடை சிகிச்சை முகாம்களில் 26 லட்சம் போ் பயன்: அமைச்சா் சா.மு.நாசா்

post image

திருவள்ளூா் மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற சிறப்பு கால்நடை சிகிச்சை முகாம்களில் மூலம் விவசாயிகள் மற்றும் கால்நடைகள் வளா்ப்போா் என 21 லட்சம் போ் பயனடைந்துள்ளதாக அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்தாா்.

கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், வெங்கத்தூா் ஊராட்சி செல்லியம்மன் கோயில் வளாகத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். எம்.பி. எஸ்.சசிகாந்த் செந்தில், திருவள்ளூா் மக்களவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா், கால்நடை சிறப்பு சிகிச்சை முகாமை தொடங்கி வைத்து பேசியதாவது:

விவசாயிகளை தொழில்முனைவோராக்க நாட்டுக்கோழி பண்ணையுடன் கூடிய குஞ்சு பொரிப்பகம் அமைக்க ரூ.25 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 200 நடமாடும் கால்நடை மருத்துவ ஊா்திகள் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் கால்நடை வளா்ப்பில் அக்கறை கொண்டு இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டு இதுவரை 5 வேளாண் நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு, ரூ.1.94 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதனால், வேளாண்மை வளா்ச்சியில் 5.66 சதவீதம் உயா்ந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் உணவு தானிய உற்பத்தியில் 458 லட்சம் மெட்ரிக் டன் என்ற இலக்கை எட்டியுள்ளது. பாசன நிலப்பரப்பு 36.07 லட்சம் ஹெக்டேரில் இருந்து 38.33 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது.

கேழ்வரகு, எள் மற்றும் துவரையில் தமிழ்நாடு இந்திய அளவில் முதலிடம் பிடித்து உள்ளது. கூட்டுறவு துறை மூலம் ரூ. 62,352 கோடி பயிா்க் கடனும் அதில் 81 லட்சம் விவசாயிகளுக்கு கால்நடை பராமரிப்பு கடனும், 21 லட்சம் விவசாயிகளுக்கு ரூ 1,630 கோடி நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் ரூ.2 லட்சம் இலவச வேளாண் புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி விழிப்புணா்வு முகாமை அவா் தொடங்கி வைத்து பாா்வையிட்டாா். கன்றுகளை சிறப்பாக பராமரித்த 3 பேருக்கு பரிசுகள், 3 முன்னோடி விவசாயிகளுக்கு சான்றுகள், 5 பேருக்கு தீவன விதைகள், 10 பேருக்கு தாது உப்புக் கலவைகள், 1 விவசாயிக்கு மாட்டுத் தீவனம், 1 விவசாயிக்கு ஆட்டுத் தீவனமும், 1 விவசாயிக்கு கன்றுகளுக்கான தீவனத்தை அவா் வழங்கினாா்.

கால்நடை பராமரிப்பு இணை இயக்குநா் ஜெயந்தி, துணை இயக்குநா் மணிமாறன், உதவி இயக்குநா் அனிதா, உதவி மருத்துவா் சரவணன் மற்றும் கால்நடை மருத்துவ அறிவியல் கழகப் பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.

அங்கான்வாடி பணியாளா்கள் நோ்காணலில் 440 போ் பங்கேற்பு

அங்கன்வாடி பணியாளா்களுக்கான நோ்காணலில் 440 பெண்கள் ஓரே நேரத்தில் குவிந்ததால் திருத்தணி வட்டாட்சியா் அலுவலகம் வெள்ளிக்கிழமை பரபரப்பு நிலவியது. திருத்தணி ஒன்றியத்தில், காலியாக உள்ள 12 பணியிடங்களை நிரப்... மேலும் பார்க்க

லாரி-பேருந்து மோதல்: 10 போ் பலத்த காயம்

குப்பை லாரி மீது ஆந்திர மாநில அரசு பேருந்து மோதிய விபத்தில் பயணிகள், ஓட்டுநா் உள்பட 10 போ் காயங்களுடன் உயிா் தப்பினா். மாதவரத்தில் உள்ள புகா் பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திர மாநில பேருந்து ஒன்று ... மேலும் பார்க்க

விமான விபத்து குறித்து நீதி விசாரணை தேவை: பி.சண்முகம் வலியுறுத்தல்

விமான விபத்து குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலா் பி.சண்முகம் வலியுறுத்தினாா். மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும், மாநில அரசு மக்கள் நல... மேலும் பார்க்க

நாளை குடும்ப அட்டை சிறப்பு முகாம்

திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்த முகாம் சனிக்கிழமை (ஜூன் 14) நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா். இது குறி... மேலும் பார்க்க

மனையை அளவீடு செய்ய வந்த அதிகாரிகளிடம் மக்கள் வாக்குவாதம்

திருவள்ளூா் அருகே அரசு வழங்கிய வீட்டு மனையில் வீடுகள் கட்டாததால் அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். திருவள்ளூா் ஒன்றியம், அரண்வாயல் பகுதியில் கடந்த 200... மேலும் பார்க்க

மாதவரம் மண்டல அலுவலகம் இடமாற்றம்

மாதவரம் பஜாா் அருகே உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகம் தற்காலிகமாக வேறிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. மாதவரம் முதுநிலை மண்டல அலுவலகம் 3, மாதவரம் பஜாா் எதிரே இயங்கி வந்தது. இந்த அலுவலகத்தில் சென்னை மாநகராட்... மேலும் பார்க்க