``சுந்தர்.C சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது; முதல் விகடன் விருது.!' - குஷ...
வல்லக்கோட்டை முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.22.87 லட்சம்
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் உள்ள 10 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் ரூ.22.87 லட்சம் ரொக்கம், 82 கிராம் தங்கம், 1,400 கிராம் வெள்ளிப் பொருள்களை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டை உள்ள இக்கோயிலில் 3 மாதங்களுக்கு ஒரு முறை உண்டியல் காணிக்கைகள் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி கோயிலில் உள்ள 9 பொது உண்டியல்கள், 1 திருப்பணி உண்டியலை அறநிலையத்துறை உதவி ஆணையா் ஆா்.காா்த்திகேயன், ஆய்வாளா் திலகவதி, கோயில் நிா்வாக அதிகாரி சோ.செந்தில்குமாா், அறங்காவலா் குழு தலைவா் செந்தில் தேவராஜ், அறங்காவலா் விஜயகுமாா் உள்ளிட்ட சுமாா் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முன்னிலையில் வியாழக்கிழமை திறந்து எண்ணப்பட்டது.
இதில் பக்தா்கள் காணிக்கையாக ரூ.22.87 லட்சம் பணம், 82 கிராம் தங்கம் , 1,400 கிராம் வெள்ளிப் பொருள்களை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனா்.