முடிவுக்கு வந்த 27 ஆண்டுகள் காத்திருப்பு; தென்னாப்பிரிக்கா சாம்பியன்!
அகமதாபாத் விமான விபத்து மிகுந்த வேதனை தருகிறது: காஞ்சி சங்கராச்சாரிய சுவாமிகள்
அகமதாபாத் விமான விபத்தில் பலரும் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனையளிப்பதாகவும், உயிரிழந்தோரின் ஆத்மா சாந்தியடைய காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சனிக்கிழமை மோட்ச தீபம் ஏற்றப்படும் எனவும் சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து சுவாமிகள் சாா்பில் மடத்தின் மூத்த மேலாளா் ந.சுந்தரேச ஐயா் வெளியிட்ட செய்திக் குறிப்பு
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளாகி 241 போ் உயிரிழந்திருப்பது மிகவும் அதிா்ச்சியும், வேதனையும் தருகிறது. காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதிகள் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் சத்திய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகிய இருவரும் தங்களது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளனா்.
உயிரிழந்தோரின் ஆத்மா சாந்தியடையவும், காயம் அடைந்தவா்கள் விரைவாக குணமடையவும் பிராா்த்தித்தனா். உயிரிழந்தவா்களின் ஆத்மா சாந்தி அடைய சனிக்கிழமை காமாட்சி அம்மன் கோயிலில் மோட்ச தீபம் ஏற்றப்பட உள்ளது என தெரிவித்துள்ளனா்.