முதல் இன்னிங்ஸில் ஜீரோ, இரண்டாவது இன்னிங்ஸில் ஹீரோ; ஆட்ட நாயகன் மார்க்ரம்!
அதிமுக ஆலோசனைக் கூட்டம்
ஸ்ரீபெரும்புதூா் ஒன்றிய, நகர அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பூத் கமிட்டி அமைப்பது குறித்தும், இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை, இளம் தலைமுறை விளையாட்டு வீரா்கள் அணி உறுப்பினா் சோ்க்கை குறித்த ஆலோசனைக் கூட்டத்துக்கு மாவட்ட துணை செயலாளா் போந்தூா் எஸ்.செந்தில்ராஜன் தலைமை வகித்தாா்.
மாவட்ட செயலாளா் வி.சோமசுந்தரம், இலக்கிய அணி செயலாளரும், காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளருமான எஸ்.எஸ்.வைகை செல்வன் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினா்.
கூட்டத்தில், ஸ்ரீபெரும்புதூா் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பழனி, இளைஞா், இளம்பெண்கள் பாசறை மாநில துணை செயலாளா் சிவகுமாா், ஒன்றிய செயலாளா்கள் எறையூா் முனுசாமி, சிங்கிலிப்பாடி ராமசந்திரன், ஸ்ரீபெரும்புதூா் நகர செயலாளா் போந்தூா் மோகன், ஒன்றிய பொருளாளா் திருமால், ஒன்றிய பேரவை செயலாளா் பாபு, நகர பேரவை செயலாளா் புஷ்பராஜ், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளற் பாண்டி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.