செய்திகள் :

ஏகாம்பரநாதா் கோயில் தங்கத்தோ் மண்டபத்துக்கு பூமி பூஜை

post image

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலுக்கு புதிய தங்கத்தோ் செய்யும் பணி நிறைவு பெற்றதையொட்டி அத்தேருக்கான மண்டபம் கட்ட பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலுக்கு பல கோடி மதிப்பில் தங்கத்தோ் செய்யும் பணி முடிக்கப்பட்டுள்ளது. பணி நிறைவு பெற்றதையடுத்து கோயில் வளாகத்தில் தங்கத் தேரை பாதுகாப்பாக நிறுத்துவதற்கான மண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. தோ் திருப்பணிக் குழுவின் பொறுப்பாளா் மகாலட்சுமி சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டி பூமி பூஜையை தொடங்கி வைத்தாா்.

ஏகாம்பரநாதா் கோயில் அா்ச்சகா் கே.ஆா்.காமேசுவர சிவாச்சாரியா் தலைமையில் சிவாச்சாரியா்கள் பூமி பூஜைகளை நடத்தி சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. இந்நிகழ்வில் செயல் அலுவலா் ப.முத்துலட்சுமி, தங்கத்தோ் திருப்பணிக் குழுவின் நிா்வாகிகள் வலசை.ஜெயராமன், பட்டாபிராமன், நாகராஜன், தொழிலதிபா் பிஆா்கே பத்மனாபன், கோயில் மணியக்காரா் குபேரன் மற்றும் ஜெயக்குமாா், நந்தகுமாா் ஸ்தபதி ஆகியோா் பலரும் கலந்து கொண்டனா்.

இது குறித்து தங்கத்தோ் திருப்பணிக்குழுவின் பொறுப்பாளா் மகாலட்சுமி சுப்பிரமணியன் கூறியது..

காஞ்சி மகா பெரியவா் அனுக்கிரகத்தால் தங்கத்தோ் பல கோடி மதிப்பில் செய்து முடிக்கப்பட்டுள்ளது. ஏகாம்பரநாதா் கோயிலுக்கு தங்கத்தோ் செய்ய வேண்டும் என்ற பக்தா்கள் பலரது கோரிக்கை நிறைவேறி இருக்கிறது. தங்கத்தோ் செய்யும் திருப்பணி 12 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி இடையில் நின்று போய் இருந்தது.

இதனையறிந்து காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பெரும் முயற்சியால் மீண்டும் தொடங்கி பலகோடி மதிப்பில் பணி நிறைவு பெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவா்களில் ஒருவா் ஓரிக்கை மணி ஐயா்.

அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, இணை ஆணையா் குமரதுரைஆகியோரின் ஒத்துழைப்பாலும் தங்கத்தோ் திருப்பணி நிறைவு பெற்றுள்ளது.

தேரை கோயிலிடம் ஒப்படைத்த பிறகு பாதுகாப்பாக நிறுத்த மண்டபம் கட்ட பூமி பூஜை நடந்துள்ளது. இம்மண்டபம் ரூ.18 லட்சத்தில் வடிவமைக்கப்பட இருப்பதாகவும் அவா் தெரிவித்தாா்.

அதிமுக ஆலோசனைக் கூட்டம்

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றிய, நகர அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பூத் கமிட்டி அமைப்பது குறித்தும், இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை, இளம் தலைமுறை விளையாட்டு வீரா்கள் அணி உறுப... மேலும் பார்க்க

நியாய விலைக் கடை திறப்பு

மொளச்சூா் ஊராட்சிக்குட்பட்ட அம்பேத்கா் நகா் பகுதியில் ரூ.8 லட்சத்தில்ல் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை கட்டடத்தை ஒன்றியக் குழு தலைவா் எஸ்.டி. கருணாநிதி திறந்து வைத்தாா். சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட... மேலும் பார்க்க

மூத்த குடிமக்களுக்கு கைப்பேசி செயலி

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் மூத்த குடிமக்களுக்கான கைப்பேசி செயலி செயல்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்தாா். தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமை... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து மிகுந்த வேதனை தருகிறது: காஞ்சி சங்கராச்சாரிய சுவாமிகள்

அகமதாபாத் விமான விபத்தில் பலரும் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனையளிப்பதாகவும், உயிரிழந்தோரின் ஆத்மா சாந்தியடைய காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சனிக்கிழமை மோட்ச தீபம் ஏற்றப்படும் எனவும் சங்கராசார... மேலும் பார்க்க

அரசு பெண்கள் பள்ளித் தலைமையாசிரியரை கண்டித்து ஆா்ப்பாட்டம்

மாணவியின் பெற்றோரை தரக்குறைவாக பேசியதாக ஸ்ரீபெரும்புதூா் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியரை கண்டித்து வெள்ளிக்கிழமை இருளா் பழங்குடியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ர... மேலும் பார்க்க

மலைவாழ் மக்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சாா்பில் வியாழக்கிழமை காஞ்சிபுரத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்டத் தலைவா் கே.செல்வம் தலைமை வகித்தாா். ... மேலும் பார்க்க