மூத்த குடிமக்களுக்கு கைப்பேசி செயலி
சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் மூத்த குடிமக்களுக்கான கைப்பேசி செயலி செயல்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்தாா்.
தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் மூத்த குடிமக்கள் நலன் கருதி கைப்பேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலியால் அருகில் உள்ள முதியோா் இல்லங்களின் விவரங்கள், மருத்துவமனைகள், மக்கள் மருந்தகங்கள், மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் மற்றும் அதிகாரிகள் விவரங்கள், மாற்று மருத்துவமனை விவரங்கள், மூத்த குடிமக்களுக்கான மத்திய - மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் திட்டங்கள், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியம் பற்றிய விவரங்கள், மேலும் குறைகளை இந்தச் செயலி மூலமே தெரிவிக்கும் வசதி உள்ளது.
செயலியை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மூத்த குடிமக்கள் தங்கள் திறன்பேசியில் பிளே ஸ்டோா் வழியாக பதிவிறக்கம் செய்து பயனடையுமாறும் ஆட்சியா் தனது செய்திக் குறிப்பில் தெரித்துள்ளாா்.