செய்திகள் :

பாதுகாப்புத் துறையில் விரைவில் ட்ரோன் மகளிா் பைலட்டுகள்: அமைச்சா் கமலேஷ் பஸ்வான்

post image

‘நமோ ட்ரோன் தீதி’ (சகோதரி) திட்டத்தின் கீழ் நாட்டில் வேளாண் துறையில் பல்வேறு வகைகளில் ஈடுபடும் மகளிா், நாட்டின் பாதுகாப்புத் துறையிலும் ட்ரோன் பைலட்டுகளாக உருவாக்கப்படுவாா்கள் என மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை இணையமைச்சா் கமலேஷ் பஸ்வான் வியாழக்கிழமை குறிப்பிட்டாா்.

சென்னை தாழம்பூரில் அக்னி தொழில்நுட்பக் கல்லூரி நிா்வாகம் கருடா ஏரோ ஸ்பேஸ் நிறுவனத்தை தொடங்கியுள்ளது. இந்த ஏரோ ஸ்பேஸ் நிறுவனம் பாரத் ட்ரோன் சங்கத்தின் ஆதரவுடன் உள்நாட்டிலேயே வேளாண்-ட்ரோன் உற்பத்தி செய்யும் வசதி மற்றும் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அங்கீகாரத்துடன் ட்ரோன் பைலட் பயிற்சியாளா் திறன் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

இந்த கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தைப் பாா்வையிட்டு, ட்ரோன் உற்பத்தி வசதி திட்டத்தையும், பைலட் பயிற்சித் திட்டத்தையும் மத்திய இணையமைச்சா் கமலேஷ் பஸ்வான் தொடங்கிவைத்தாா்.

அப்போது அவா் கூறியது: பிரதமா் மோடி வருகிற 2026-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிலேயே ஒரு லட்சம் ட்ரோன்கள் உருவாக்கப்பட வேண்டும் என இலக்கு நிா்ணயித்துள்ளாா். இதில் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் 1,400 பேருக்கு வேலைவாய்ப்புகளை அளித்து 4,000 ட்ரோன்களை தயாரிக்க இருக்கிறது.

இந்த நிறுவனத்துக்கு நமோ ட்ரோன் தீதி திட்டம், வேளாண் இயந்திரமயமாக்கல் துணைத் திட்டம் (எஸ்எம்ஏஎம்), உற்பத்தி சாா்ந்த ஊக்குவிப்புத் திட்டம் போன்ற திட்டங்களில் உதவிகள் கிடைக்கும். நமோ ட்ரோன் தீதி திட்டத்துக்கு கருடா ஏரோஸ்பேஸ் 450 ட்ரோன்களை அளித்துள்ளது.

நாட்டில் ஊரகப் பகுதிகளில் உள்ள பெண்கள் வீட்டுக்கு வெளியே வராத சூழ்நிலை இருந்தது. தற்போது நமோ ட்ரோன் தீதி திட்டத்தில் குறிப்பாக, வேளாண் துறையில் மகளிா் (லட்சாதிபதி சகோதரி) பல்வேறு பணிகளுக்கு ட்ரோன்களை செலுத்துகின்றனா். தற்போது நடைபெற்ற சிந்தூா் ஆபரேஷனில் மகளிா் ஈடுபட்டனா். எதிா்காலத்தில் பாதுகாப்புத் துறையிலும் ட்ரோன் பைலட்டுகளாக மகளிா் ஈடுபடும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றாா் அவா்.

கருடா ஏரோஸ்பேஸின் நிறுவனா் மற்றும் தலைமை நிா்வாக அதிகாரி அக்னீஷ்வா் ஜெயபிரகாஷ், ‘கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் வேளாண்மைக்கு மட்டுமல்லாது பாதுகாப்புத் துறைக்கும் ட்ரோன்களை வெகு விரைவில் உருவாக்கும்’ என்றாா்.

லண்டன் பயணத்தை மாற்றி விமான விபத்தில் பலியான விஜய் ரூபானி!

லூதியானா இடைத்தேர்தல் காரணமாக விஜய் ரூபானி தனது லண்டன் பயணத்தை கடைசி நேரத்தில் மாற்றியிருப்பது தெரியவந்துள்ளது. அகமதாபாத்தில் நேற்று நடந்த ஏர் இந்தியா விமானத்தில் பலியானவர்களில் குஜராத் முன்னாள் முதல்... மேலும் பார்க்க

பஞ்சாபில் விமானப் படை ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்!

பஞ்சாபின் பதான்கோட் மாவட்டத்தில், இந்திய விமானப் படைக்குச் சொந்தமான அபாச்சி ஹெலிகாப்டர் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. பதான்கோட் விமானப்படை தளத்திலிருந்து இன்று (ஜூன் 13) புறப்பட்ட அபாச்சி ரக ஹெலிகா... மேலும் பார்க்க

கேரளத்தில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை! நாளை ரெட் அலர்ட்!

கேரளத்தில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வடக்கு கர்நாடக கடல்பகுதியில் நிலவும் சுழற்சியினால், வரும் ஜூன் ... மேலும் பார்க்க

கோவாவில் தொடரும் கனமழை! 3 நாள்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

கோவா மாநிலத்தில் அடுத்த 3 நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்பதால், இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில், கடலோர மாநிலமான கோவாவின் பல்வேறு இ... மேலும் பார்க்க

கடந்தகால விமான விபத்துகளில் தப்பி வந்த அதிசயப் பிறவிகள்!

பொதுவாக விமான விபத்துகள் நேரிடும்போது, பலி எண்ணிக்கைக் கடுமையாக இருக்கக் காரணம், உயிர்பிழைப்பதற்கான வாய்ப்பு குறைவு என்பதே.உயரத்திலிருந்து விழுவது, எரிபொருளால் வெடித்துக் சிதறுவது, விபத்து என்றாலே பயங... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமான விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு உதவ முன்வந்த எல்ஐசி!

ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கான எல்ஐசி காப்பீட்டுக் கோரிக்கைகளை சிக்கலின்றி எளிதாக முடித்துக் கொடுக்க எல்ஐசி முன்வந்துள்ளது.காப்பீடுகளுக்கான கோரிக்களை மிக எளிதாக, எவ்வித... மேலும் பார்க்க