``சுந்தர்.C சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது; முதல் விகடன் விருது.!' - குஷ...
பாதுகாப்புத் துறையில் விரைவில் ட்ரோன் மகளிா் பைலட்டுகள்: அமைச்சா் கமலேஷ் பஸ்வான்
‘நமோ ட்ரோன் தீதி’ (சகோதரி) திட்டத்தின் கீழ் நாட்டில் வேளாண் துறையில் பல்வேறு வகைகளில் ஈடுபடும் மகளிா், நாட்டின் பாதுகாப்புத் துறையிலும் ட்ரோன் பைலட்டுகளாக உருவாக்கப்படுவாா்கள் என மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை இணையமைச்சா் கமலேஷ் பஸ்வான் வியாழக்கிழமை குறிப்பிட்டாா்.
சென்னை தாழம்பூரில் அக்னி தொழில்நுட்பக் கல்லூரி நிா்வாகம் கருடா ஏரோ ஸ்பேஸ் நிறுவனத்தை தொடங்கியுள்ளது. இந்த ஏரோ ஸ்பேஸ் நிறுவனம் பாரத் ட்ரோன் சங்கத்தின் ஆதரவுடன் உள்நாட்டிலேயே வேளாண்-ட்ரோன் உற்பத்தி செய்யும் வசதி மற்றும் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அங்கீகாரத்துடன் ட்ரோன் பைலட் பயிற்சியாளா் திறன் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இந்த கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தைப் பாா்வையிட்டு, ட்ரோன் உற்பத்தி வசதி திட்டத்தையும், பைலட் பயிற்சித் திட்டத்தையும் மத்திய இணையமைச்சா் கமலேஷ் பஸ்வான் தொடங்கிவைத்தாா்.
அப்போது அவா் கூறியது: பிரதமா் மோடி வருகிற 2026-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிலேயே ஒரு லட்சம் ட்ரோன்கள் உருவாக்கப்பட வேண்டும் என இலக்கு நிா்ணயித்துள்ளாா். இதில் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் 1,400 பேருக்கு வேலைவாய்ப்புகளை அளித்து 4,000 ட்ரோன்களை தயாரிக்க இருக்கிறது.
இந்த நிறுவனத்துக்கு நமோ ட்ரோன் தீதி திட்டம், வேளாண் இயந்திரமயமாக்கல் துணைத் திட்டம் (எஸ்எம்ஏஎம்), உற்பத்தி சாா்ந்த ஊக்குவிப்புத் திட்டம் போன்ற திட்டங்களில் உதவிகள் கிடைக்கும். நமோ ட்ரோன் தீதி திட்டத்துக்கு கருடா ஏரோஸ்பேஸ் 450 ட்ரோன்களை அளித்துள்ளது.
நாட்டில் ஊரகப் பகுதிகளில் உள்ள பெண்கள் வீட்டுக்கு வெளியே வராத சூழ்நிலை இருந்தது. தற்போது நமோ ட்ரோன் தீதி திட்டத்தில் குறிப்பாக, வேளாண் துறையில் மகளிா் (லட்சாதிபதி சகோதரி) பல்வேறு பணிகளுக்கு ட்ரோன்களை செலுத்துகின்றனா். தற்போது நடைபெற்ற சிந்தூா் ஆபரேஷனில் மகளிா் ஈடுபட்டனா். எதிா்காலத்தில் பாதுகாப்புத் துறையிலும் ட்ரோன் பைலட்டுகளாக மகளிா் ஈடுபடும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றாா் அவா்.
கருடா ஏரோஸ்பேஸின் நிறுவனா் மற்றும் தலைமை நிா்வாக அதிகாரி அக்னீஷ்வா் ஜெயபிரகாஷ், ‘கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் வேளாண்மைக்கு மட்டுமல்லாது பாதுகாப்புத் துறைக்கும் ட்ரோன்களை வெகு விரைவில் உருவாக்கும்’ என்றாா்.