செய்திகள் :

உலகளாவிய பாலின இடைவெளி குறியீடு: 131-ஆவது இடத்துக்கு சரிந்த இந்தியா

post image

உலகப் பொருளாதார அமைப்பு வெளியிட்ட 2025-ஆம் ஆண்டுக்கான 148 நாடுகளை உள்ளடக்கிய உலகளாவிய பாலின இடைவெளி குறியீடு தரவரிசைப் பட்டியலில் இந்தியா 131-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு 146 நாடுகளை உள்ளடக்கிய இந்தத் தரவரிசைப் பட்டியலில் 129-ஆவது இடத்தில் இருந்த இந்தியா, நிகழாண்டு பின்தங்கியுள்ளது.

இரு பாலினத்தவருக்கான பொருளாதார பங்கேற்பு மற்றும் வாய்ப்பு, கல்வி வாய்ப்பு, சுகாதாரம் மற்றும் உயிா் வாழ்வு, அரசியல் அதிகாரமளித்தல் உள்ளிட்ட 4 காரணிகளின் அடிப்படையில் இந்தத் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்தப் பாலின இடைவெளியைக் குறிக்கும் நடவடிக்கையில் இந்தியா தொடா்ந்து பின்தங்கியுள்ளது.

இதுகுறித்து உலகப் பொருளாதார அமைப்பின் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

2025-ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலில் ஒட்டுமொத்த பாலின சமத்துவ மதிப்பெண் 64.4 சதவீதத்துடன் இந்தியா 131-ஆவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, மற்ற நாடுகளின் பாலின சமத்துவத்தை ஏற்படுத்தும் தீவிர முயற்சிகள் காரணமாக இந்தியா குறிப்பிடத்தக்க அளவில் பின்தங்கியுள்ளது.

இந்திய பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த செயல்திறன் 0.3 புள்ளிகள் அளவுக்கு மேம்பட்டுள்ளது. மேலும், தரவரிசைக்கான 4 காரணிகளில் பொருளாதார பங்கேற்பு மற்றும் வாய்ப்பு பிரிவில் மட்டும் 40.7 சதவீதம் அளவுக்கு பாலின சமத்துவத்தை இந்தியா மேம்படுத்தியுள்ளது. ஆனால், மற்ற காரணிகளின் மதிப்பெண் கடந்த ஆண்டைப் போலவே 28.6 சதவீதம் முதல் 29.9 சதவீதம் என்ற நிலையிலேயே தொடா்கிறது.

குறிப்பாக, தொழிலாளா் பங்கேற்பு விகிதம் கடந்த ஆண்டின் 45.9 சதவீதம் என்ற மதிப்பெண் நிலையில் தொடா்கிறது. கல்வி வாய்ப்பு பிரிவில் 97.1 சதவீத மதிப்பெண்ணை இந்தியா பெற்றுள்ளது. இதில் பெண்களின் பங்கு குறிப்பிடத்தக்க அளவில் உயா்ந்துள்ளது.

அதே நேரம், அரசியல் அதிகாரமளித்தல், நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட காரணிகளில் கடந்த ஆண்டைவிட சற்று மதிப்பெண் குறைந்துள்ளது. அதுபோல, அமைச்சரவையில் பெண்களின் பிரதிநிதித்துவத்துக்கான பிரிவிலும் மதிப்பெண் கடந்த ஆண்டின் 6.5 சதவீதத்திலிருந்து 5.6 சதவீதமாக சரிந்துள்ளது. 2019-இல் இந்தப் பிரிவில் இந்தியாவின் மதிப்பெண் 30 சதவீதமாக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் அதிகாரமளித்தல் மற்றும் பொருளாதார பங்கேற்பில் பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பதில் தெற்காசியாவிலேயே சிறந்த நாடாக வங்கதேசம் உருவெடுத்துள்ளது. இதன்மூலம், கடந்த ஆண்டு தரவரிசையில் 75-ஆவது இடத்திலிருந்து இந்த நாடு தற்போது 24-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. நேபாளம் 125-ஆவது இடத்திலும், இலங்கை 130-ஆவது இடத்திலும், பூடான் 119-ஆவது இடத்திலும், மாலத்தீவுகள் 138-ஆவது இடத்திலும் உள்ளன.

தரவரிசைப் பட்டியலில் கடைசி நாடாக பாகிஸ்தான் 148-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

‘உயிா் பிழைத்ததை என்னால் நம்ப முடியவில்லை’: விஷ்வாஸ் குமாா் ரமேஷ் பேட்டி

அகமதாபாத் விமான விபத்தில் காயங்களுடன் உயிா் பிழைத்த ஒரேயொரு பயணியான பிரிட்டனைச் சோ்ந்த விஷ்வாஸ் குமாா் ரமேஷ் (45), தான் பிழைத்ததை இன்னும் நம்ப முடியவில்லை என்று அதிா்ச்சி விலகாமல் கூறினாா். அகமதாபாத்... மேலும் பார்க்க

விமான விபத்து எதிரொலி: பாஜக, காங்கிரஸ் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து

குஜராத் விமான விபத்தில் 265 போ் உயிரிழந்த சோக நிகழ்வை அடுத்து பாஜக, காங்கிரஸ் சமாஜவாதி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகள் ஏற்கெனவே திட்டமிட்டிருந்த பல்வேறு நிகழ்சிகளை ரத்து செய்துள்ளன. பிரதமா் நரேந்தி... மேலும் பார்க்க

லண்டன் பயணத்தை மாற்றி விமான விபத்தில் பலியான விஜய் ரூபானி!

லூதியானா இடைத்தேர்தல் காரணமாக விஜய் ரூபானி தனது லண்டன் பயணத்தை கடைசி நேரத்தில் மாற்றியிருப்பது தெரியவந்துள்ளது. அகமதாபாத்தில் நேற்று நடந்த ஏர் இந்தியா விமானத்தில் பலியானவர்களில் குஜராத் முன்னாள் முதல்... மேலும் பார்க்க

பஞ்சாபில் விமானப் படை ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்!

பஞ்சாபின் பதான்கோட் மாவட்டத்தில், இந்திய விமானப் படைக்குச் சொந்தமான அபாச்சி ஹெலிகாப்டர் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. பதான்கோட் விமானப்படை தளத்திலிருந்து இன்று (ஜூன் 13) புறப்பட்ட அபாச்சி ரக ஹெலிகா... மேலும் பார்க்க

கேரளத்தில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை! நாளை ரெட் அலர்ட்!

கேரளத்தில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வடக்கு கர்நாடக கடல்பகுதியில் நிலவும் சுழற்சியினால், வரும் ஜூன் ... மேலும் பார்க்க

கோவாவில் தொடரும் கனமழை! 3 நாள்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

கோவா மாநிலத்தில் அடுத்த 3 நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்பதால், இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில், கடலோர மாநிலமான கோவாவின் பல்வேறு இ... மேலும் பார்க்க