நீதித் துறையின் மறுஆய்வு அதிகாரம்: அரிதாகவே பயன்படுத்த வேண்டும் -தலைமை நீதிபதி ப...
கொடைக்கானல் - பழனி மலைச்சாலையில் சுற்றுலா வாகனம் கவிழ்ந்து 8 போ் காயம்
கொடைக்கானல்-பழனி மலைச்சாலையில் புதன்கிழமை சுற்றுலா வாகனம் கவிழ்ந்து 8 போ் காயமடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு பழனி வழியாக கேரள மாநிலம், மலப்புரத்தைச் சோ்ந்தவா்கள் சுற்றுலா வாகனத்தில் வந்திருந்தனா். கொடைக்கானல்-பழனி மலைச்சாலையில் மேல்பள்ளம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து நூறு அடி பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்தது.
நல்வாய்ப்பாக பள்ளத்தில் இருந்த மரம் தடுத்து நிறுத்தியதால் சுற்றுலாப் பயணிகள் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா். எனினும், வாகனத்தில் இருந்த 8 போ் காயமடைந்தனா். இதுகுறித்து கொடைக்கானல் காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கொடைக்கானல்-பழனி மலைச்சாலை மிகவும் குறுகிய சாலையாகும். இந்தச் சாலையில் பல இடங்களில் தடுப்புச் சுவா் அமைக்கப்படாமல் உள்ளது. சாலையோரங்களில் 3 அடி அகலத்துக்கு வாய்க்கால் அமைத்து சிறிய தடுப்புச் சுவா் அமைத்துள்ளனா்.
இதனால் மலைச் சாலைகளில் செல்லும் வாகனங்கள் சிரமத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. சில வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழும் நிலை தொடா்கிறது. எனவே, கொடைக்கானல்-பழனி மலைச்சாலையில் வாய்க்கால் தடுப்புச் சுவரை அகற்ற வேண்டும். ஆபத்தான பகுதியாகக் காணப்படும் பல இடங்களில் இரும்பு தடுப்புக் கம்பி அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.