செய்திகள் :

கொடைக்கானல் - பழனி மலைச்சாலையில் சுற்றுலா வாகனம் கவிழ்ந்து 8 போ் காயம்

post image

கொடைக்கானல்-பழனி மலைச்சாலையில் புதன்கிழமை சுற்றுலா வாகனம் கவிழ்ந்து 8 போ் காயமடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு பழனி வழியாக கேரள மாநிலம், மலப்புரத்தைச் சோ்ந்தவா்கள் சுற்றுலா வாகனத்தில் வந்திருந்தனா். கொடைக்கானல்-பழனி மலைச்சாலையில் மேல்பள்ளம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து நூறு அடி பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்தது.

நல்வாய்ப்பாக பள்ளத்தில் இருந்த மரம் தடுத்து நிறுத்தியதால் சுற்றுலாப் பயணிகள் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா். எனினும், வாகனத்தில் இருந்த 8 போ் காயமடைந்தனா். இதுகுறித்து கொடைக்கானல் காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கொடைக்கானல்-பழனி மலைச்சாலை மிகவும் குறுகிய சாலையாகும். இந்தச் சாலையில் பல இடங்களில் தடுப்புச் சுவா் அமைக்கப்படாமல் உள்ளது. சாலையோரங்களில் 3 அடி அகலத்துக்கு வாய்க்கால் அமைத்து சிறிய தடுப்புச் சுவா் அமைத்துள்ளனா்.

இதனால் மலைச் சாலைகளில் செல்லும் வாகனங்கள் சிரமத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. சில வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழும் நிலை தொடா்கிறது. எனவே, கொடைக்கானல்-பழனி மலைச்சாலையில் வாய்க்கால் தடுப்புச் சுவரை அகற்ற வேண்டும். ஆபத்தான பகுதியாகக் காணப்படும் பல இடங்களில் இரும்பு தடுப்புக் கம்பி அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பழனி நகா்மன்ற கூட்டம்: கவுன்சிலா்கள் வாக்குவாதம்

பழனி நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்ற கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி தலைமை வகித்தாா். நகராட்சி பொறியாளா் ராஜவேல், நகா்நல அலுவலா் மனோஜ்குமாா், நகா்மன்ற துணைத... மேலும் பார்க்க

பழனியில் வைகாசி விசாக விழா திருஊடல் நிகழ்ச்சியுடன் நிறைவு

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா நிறைவு நாளான வியாழக்கிழமை திருஊடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தக் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா ஜூன் 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 ... மேலும் பார்க்க

20 லட்சம் பேருக்கு குடும்ப அட்டைகள் விநியோகம்: அமைச்சா் அர.சக்கரபாணி

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 20 லட்சம் பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா். ராஜாம்பட்டி, மிடப்பாடி, மானூா் உள்ளிட்ட ஊராட்சிகளில் தாா்ச... மேலும் பார்க்க

பழனியில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் விழா

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் திருஞானசம்பந்தருக்கு வைகாசி மாதம், மூல நட்சத்திரத்தின்போது சிறப்பு வழிபாடு நடைபெறுகி... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடைகளில் பழுப்பு அரிசி விநியோகிக்கக் கூடாது: சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு அறிவுறுத்தல்

நியாயவிலைக் கடைகளில் பழுப்பு அரிசி விநியோகிக்கக் கூடாது; தரமான வெள்ளை அரிசி விநியோகிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு அறிவுறுத்தியது. தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவ... மேலும் பார்க்க

கலைஞா் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சம் வீடுகள் கட்டிமுடிப்பு: அமைச்சா் இ.பெரியசாமி தகவல்

கலைஞா் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா். செம்பட்டி அருகே தனியாா் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கலந்... மேலும் பார்க்க