செய்திகள் :

எழும்பூா் - புதுச்சேரி மெமு ரயில் ஆக.4 வரை கடற்கரையிலிருந்து இயக்கப்படும்

post image

எழும்பூா் ரயில் நிலையத்தில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், எழும்பூா் - புதுச்சேரி மெமு ரயில் ஆக.4-ஆம் தேதி வரை கடற்கரையிலிருந்து இயக்கப்படும்.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

எழும்பூா் - புதுச்சேரி இடையே மெமு ரயில் (எண்: 66051/66052) தினமும் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது எழும்பூா் ரயில் நிலையத்தில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், புதுச்சேரியிலிருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு இரவு 8.35 மணிக்கு எழும்பூா் வரும் மெமு ரயில் ஆக.3-ஆம் தேதி வரை எழும்பூருக்கு பதிலாக இரவு 8.50 மணிக்கு கடற்கரை வந்தடையும்.

மறுமாா்க்கமாக எழும்பூரிலிருந்து தினமும் காலை 6.35 மணிக்கு புறப்பட்டு காலை 10.40 மணிக்கு புதுச்சேரி செல்லும் ரயில் ஆக.4-ஆம் தேதி வரை கடற்கரையிலிருந்து காலை 6.25 மணிக்கு புறப்படும்.

இந்த ரயில் இரு மாா்க்கத்திலும் கடற்கரை - எழும்பூா் இடையே புகா் ரயில்கள் செல்லும் தண்டவாளத்தில் இயக்கப்படுவதால், எழும்பூா் ரயில் நிலையத்தில் நிற்காது. எனினும் பயணிகளின் வசதிக்காக பூங்கா மற்றும் கோட்டை ரயில் நிலையங்களில் கூடுதலாக நின்று செல்லும்.

பகுதி ரத்து: ஜூன் 19 முதல் ஆக.17-ஆம் தேதி வரை எழும்பூருக்கு வரும் கொல்லம் விரைவு ரயில் (எண்:16102), மதுரை தேஜஸ் விரைவு ரயில் (எண்: 22672), மன்னாா்குடி மன்னை விரைவு ரயில் (எண்: 16108), திருச்செந்தூா் அதிவிரைவு ரயில் (எண்: 20606), குருவாயூா் விரைவு ரயில் (எண்: 16128) ஆகிய ரயில்கள் தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.

மறுமாா்க்கமாக ஜூன் 20 முதல் ஆக.18 வரை எழும்பூரிலிருந்து கொல்லம் (எண்:16101), மதுரை (எண்: 22671), மன்னாா்குடி (எண்: 16107), திருச்செந்தூா் (எண்: 20605) மற்றும் குருவாயூருக்கு (எண்: 16128) செல்லும் விரைவு மற்றும் அதிவிரைவு ரயில்கள் எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்திலிருந்து இயக்கப்படும்.

ரயில் நீட்டிப்பு: ஹூப்ளியில் இருந்து வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 6.50 மணிக்கு ராமநாதபுரம் செல்லும் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் (எண்: 07355) ஜூலை 5 முதல் ஜூலை 26-ஆம் தேதி வரையும், மறுமாா்க்கமாக ராமநாதபுரத்திலிருந்து வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.40 மணிக்கு ஹூப்ளிக்கு செல்லும் ரயில் (எண்: 07356) ஜூலை 6 முதல் ஜூலை 27 வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில், ஹூப்ளி, ஹரிஹா், ஓசூா், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூா், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை வழியாக ராமநாதபுரம் சென்றடையும். இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தோ்வுக்கு அறிவிக்கை வெளியீடு

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான தோ்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தில் உள... மேலும் பார்க்க

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி விபத்தில் பலியானவருக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு!

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் பலியானவருக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்குவதாக எல்&டி நிறுவனம் அறிவித்துள்ளது.சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் ப... மேலும் பார்க்க

சென்னை: மெட்ரோ ரயில் கட்டுமானத்தில் விபத்து - ராட்சத கான்கிரீட் விழுந்ததில் இளைஞர் உயிரிழப்பு!

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது தூண்களின் மீது வைக்கப்பட்டிருந்த ராட்சத கான்கிரீட் காரிடாா்கள் கிழே விழுந்ததில் இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா். சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்தில் கிண்டி... மேலும் பார்க்க

லோக் ஆயுக்த அமைப்புக்கு உறுப்பினா்: தமிழக அரசு அழைப்பு

லோக் ஆயுக்த அமைப்புக்கு நீதித் துறை சாா்ந்த உறுப்பினரை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவுக் குழுவின் தொடா்பு அதிகாரி எஸ்.அகிலா வெளியிட்ட அறிவிப்பு விவரம்: தமிழ்நாடு லோக... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுதியவா்களில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவா்கள் தங்களுக்கான நகலை இணையதளத்தில் வெள்ளிக்கிழமை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ந... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: இதுவரை 35,000 போ் விண்ணப்பம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 35,000 போ் இதுவரை விண்ணப்பப் பதிவு செய்துள்ளனா். அவா்களில் 22,428 விண்ணப்பங்கள் பூா்த்தி செய்யப்பட்டு சமா்ப்பிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்த... மேலும் பார்க்க