பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சா் அன்பில...
தென் ஆப்பிரிக்க வெள்ளம்: உயிரிழப்பு 57-ஆக உயா்வு
தென் ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட மழை, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 57-ஆக உயா்ந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பாா்வையிடுவதற்காக வியாழக்கிழமை வந்த மத்திய அமைச்சா் வெலென்கோசினி லாபிசா இந்தத் தகவலைத் தெரிவித்தாா்.
கிழக்கு கேப் மாகாணத்தில் அளவுக்கு அதிகமாக கடந்த வாரம் பெய்த பருவமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் கடுமையான குளிா் காரணமாக இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உயிரிழந்தவா்களில் ஆறு போ், ஆற்று வெள்ளத்தில் சிக்கிய பள்ளிப் பேருந்தில் இருந்த மாணவா்கள்.