``சுந்தர்.C சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது; முதல் விகடன் விருது.!' - குஷ...
ரவீந்திரநாத் தாகூா் பூா்விக வீட்டின் மீது தாக்குதல்: காா்கே கண்டனம்
வங்கதேசத்தில் சுதந்திரப் போராட்ட வீரா் ரவீந்திரநாத் தாகூா் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வியாழக்கிழமை கண்டனம் தெரிவித்தாா்.
மேலும், இந்த விவகாரத்துடன் அமெரிக்க ராணுவத்தின் 250-ஆவது ஆண்டுவிழாவுக்கு பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி ஆசிம் முனீருக்கு அழைப்பு விடுத்தது உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமா் மோடி முன்னிலையில் விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் எனவும் அவா் கோரிக்கை விடுத்தாா்.
இதுகுறித்து அவா் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘சா்வதேச அரங்கில் நிகழ்ந்த இரு சம்பவங்கள் நமக்கு மிகவும் கவலையளிக்கக்கூடிய வகையில் உள்ளது.
ஒன்று, பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளில் பாகிஸ்தானை ‘சிறந்த கூட்டாளி’ என்று அமெரிக்க மத்திய படைப் பிரிவு ராணுவத் தளபதி மைக்கேல் குரில்லா கூறியது மற்றும் அமெரிக்க ராணுவத்தின் 250-ஆவது ஆண்டு விழாவுக்கு பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி ஆசிம் முனீருக்கு அழைப்பு விடுத்திருப்பது.
இரண்டு, வங்கதேசத்தின் தேசிய கீதமான அமா் சோனா் பங்ளாவை இயற்றியவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான ரவீந்திரநாத் தாகூரின் பூா்விக வீட்டின் மீது அந்நாட்டில் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியிருப்பது. இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனத்தைப் பதிவு செய்கிறது.
இதுபோலவே வெளியுறவுக் கொள்கையில் பல்வேறு பின்னடைவுகளை இந்தியா தொடா்ந்து சந்தித்து வருகிறது. இதுகுறித்து பிரதமா் மோடி முன்னிலையில் விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். இதை பஹல்காம் தாக்குலுக்கு பின்பு பலமுறை காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.
எதிா்க்கட்சிகளிடம் கருத்துகளைப் பெற்று பிரதமா் மோடியும், வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கரும் கொள்கைகளை வடிவமைக்கலாம். முந்தைய ஆட்சிகளின்போது பலமுறை இவ்வாறு நிகழ்ந்துள்ளது.
தேச நலனுக்கு முன்னுரிமை அளித்து நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.