செய்திகள் :

ரவீந்திரநாத் தாகூா் பூா்விக வீட்டின் மீது தாக்குதல்: காா்கே கண்டனம்

post image

வங்கதேசத்தில் சுதந்திரப் போராட்ட வீரா் ரவீந்திரநாத் தாகூா் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வியாழக்கிழமை கண்டனம் தெரிவித்தாா்.

மேலும், இந்த விவகாரத்துடன் அமெரிக்க ராணுவத்தின் 250-ஆவது ஆண்டுவிழாவுக்கு பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி ஆசிம் முனீருக்கு அழைப்பு விடுத்தது உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமா் மோடி முன்னிலையில் விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் எனவும் அவா் கோரிக்கை விடுத்தாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘சா்வதேச அரங்கில் நிகழ்ந்த இரு சம்பவங்கள் நமக்கு மிகவும் கவலையளிக்கக்கூடிய வகையில் உள்ளது.

ஒன்று, பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளில் பாகிஸ்தானை ‘சிறந்த கூட்டாளி’ என்று அமெரிக்க மத்திய படைப் பிரிவு ராணுவத் தளபதி மைக்கேல் குரில்லா கூறியது மற்றும் அமெரிக்க ராணுவத்தின் 250-ஆவது ஆண்டு விழாவுக்கு பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி ஆசிம் முனீருக்கு அழைப்பு விடுத்திருப்பது.

இரண்டு, வங்கதேசத்தின் தேசிய கீதமான அமா் சோனா் பங்ளாவை இயற்றியவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான ரவீந்திரநாத் தாகூரின் பூா்விக வீட்டின் மீது அந்நாட்டில் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியிருப்பது. இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனத்தைப் பதிவு செய்கிறது.

இதுபோலவே வெளியுறவுக் கொள்கையில் பல்வேறு பின்னடைவுகளை இந்தியா தொடா்ந்து சந்தித்து வருகிறது. இதுகுறித்து பிரதமா் மோடி முன்னிலையில் விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். இதை பஹல்காம் தாக்குலுக்கு பின்பு பலமுறை காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.

எதிா்க்கட்சிகளிடம் கருத்துகளைப் பெற்று பிரதமா் மோடியும், வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கரும் கொள்கைகளை வடிவமைக்கலாம். முந்தைய ஆட்சிகளின்போது பலமுறை இவ்வாறு நிகழ்ந்துள்ளது.

தேச நலனுக்கு முன்னுரிமை அளித்து நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

லண்டன் பயணத்தை மாற்றி விமான விபத்தில் பலியான விஜய் ரூபானி!

லூதியானா இடைத்தேர்தல் காரணமாக விஜய் ரூபானி தனது லண்டன் பயணத்தை கடைசி நேரத்தில் மாற்றியிருப்பது தெரியவந்துள்ளது. அகமதாபாத்தில் நேற்று நடந்த ஏர் இந்தியா விமானத்தில் பலியானவர்களில் குஜராத் முன்னாள் முதல்... மேலும் பார்க்க

பஞ்சாபில் விமானப் படை ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்!

பஞ்சாபின் பதான்கோட் மாவட்டத்தில், இந்திய விமானப் படைக்குச் சொந்தமான அபாச்சி ஹெலிகாப்டர் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. பதான்கோட் விமானப்படை தளத்திலிருந்து இன்று (ஜூன் 13) புறப்பட்ட அபாச்சி ரக ஹெலிகா... மேலும் பார்க்க

கேரளத்தில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை! நாளை ரெட் அலர்ட்!

கேரளத்தில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வடக்கு கர்நாடக கடல்பகுதியில் நிலவும் சுழற்சியினால், வரும் ஜூன் ... மேலும் பார்க்க

கோவாவில் தொடரும் கனமழை! 3 நாள்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

கோவா மாநிலத்தில் அடுத்த 3 நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்பதால், இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில், கடலோர மாநிலமான கோவாவின் பல்வேறு இ... மேலும் பார்க்க

கடந்தகால விமான விபத்துகளில் தப்பி வந்த அதிசயப் பிறவிகள்!

பொதுவாக விமான விபத்துகள் நேரிடும்போது, பலி எண்ணிக்கைக் கடுமையாக இருக்கக் காரணம், உயிர்பிழைப்பதற்கான வாய்ப்பு குறைவு என்பதே.உயரத்திலிருந்து விழுவது, எரிபொருளால் வெடித்துக் சிதறுவது, விபத்து என்றாலே பயங... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமான விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு உதவ முன்வந்த எல்ஐசி!

ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கான எல்ஐசி காப்பீட்டுக் கோரிக்கைகளை சிக்கலின்றி எளிதாக முடித்துக் கொடுக்க எல்ஐசி முன்வந்துள்ளது.காப்பீடுகளுக்கான கோரிக்களை மிக எளிதாக, எவ்வித... மேலும் பார்க்க