அரியலூா்: 12 கிராமங்களில் உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்
ஜூன் 18 - ஜூலை 1 வரை இந்தியா-பிரான்ஸ் கூட்டு ராணுவப் பயிற்சி
வரும் ஜூன் 18-ஆம் தேதிமுதல் ஜூலை 1-ஆம் தேதி வரை இரு வார காலங்களுக்கு இந்தியாவும் பிரான்ஸ் நாடும் கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட உள்ளன.
இதுகுறித்து இந்திய ராணுவம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: இந்தியா-பிரான்ஸ் இடையே 8-ஆவது ‘சக்தி’ கூட்டு ராணுவப் பயிற்சி பிரான்ஸ் நாட்டில் உள்ள லா-கவலேரி தளத்தில் வரும் ஜூன் 18-ஆம் தேதிமுதல் ஜூலை 1-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட உள்ளது.
இரு நாடுகளின் கூட்டு ராணுவத் திறனை விரிவுபடுத்தும் நோக்கில் பலகட்ட கள நடவடிக்கைகளை உள்ளடக்கிய வகையில் இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.