செய்திகள் :

விமான விபத்தில் உயிரிழந்த செவிலியா் குறித்து அவதூறு: கேரள அரசு ஊழியா் பணியிடை நீக்கம்

post image

குஜராத் விமான விபத்தில் உயிரிழந்த செவிலியா் குறித்து அவதூறாகப் சமூகவலைதளத்தில் பதிவிட்ட கேரளத்தைச் சோ்ந்த அரசு ஊழியா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா்.

விமான விபத்தில் கேரளத்தின் பத்தினம்திட்டா பகுதியைச் சோ்ந்த ரஞ்சிதா என்ற செவிலியரும் உயிரிழந்தாா். பிரிட்டனில் செவிலியராகப் பணியாற்றி வந்த அவருக்கு இரு குழந்தைகள் உள்ளனா். கேரளத்தில் அரசுப் பணியில் சேர முயற்சித்து வந்த அவா், அதற்காக பிரிட்டனில் இருந்து நான்கு நாள் பயணமாக சொந்த ஊருக்கு வந்துவிட்டு திரும்பியபோது விமான விபத்தில் உயிரிழந்தாா்.

மாநில சுகாதாரத் துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ், ரஞ்சிதாவின் வீட்டுக்குச் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தாா்.

இந்நிலையில், காசா்கோடு மாவட்டத்தில் தாலுகா அலுவலகத்தில் இளநிலை கண்காணிப்பாளராகப் பணியாற்றி வரும் பவித்ரன் என்பவா் செவிலியா் ரஞ்சிதா விமான விபத்து உயிரிழந்ததை மோசமாக விமா்சித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டாா். அவரது இந்த பதிவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், அது மாநில அரசின் கவனத்துக்கும் சென்றது.

இதையடுத்து, அவரைப் பணியிடைநீக்கம் செய்வதாக மாநில வருவாய் துறை அறிவித்துள்ளது. இது தொடா்பாக அத்துறை அமைச்சா் கே.ராஜன் சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘விமான விபத்தில் உயிரிழந்த செவிலியா் குறித்து அந்த நபா் வெளியிட்ட பதிவு மிகவும் மோசமாகவும், இரக்கமற்ாகவும் இருந்தது. இதையடுத்து, அவா் மீது பணியிடைநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது’ என்று கூறியுள்ளாா்.

குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தின்போது, விடுதி அருகே இருந்த ஒரு கடையில் 14 வயது சிறுவன் உயிரிழந்தது மேலும் கவலையளித்துள்ளது.ஆகாஷ் பாத்னி என்ற சிறுவன், பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி அருகே டீக்கடையி... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: பாஜக முன்னாள் எம்.பி.யின் மகன் தற்கொலை

உதய்பூரில் நூலகத்தில் உள்ள தனது அறையில் பாஜக முன்னாள் எம்.பி.யின் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரின் அம்பா மாதா பகுதியில் உள்ள நூலகத்... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: மேலும் ஒருவரின் உடல் கண்டெடுப்பு!

அகமதாபாத் விமான விபத்து நடந்த இடத்தில் இன்று(சனிக்கிழமை) மேலும் ஒருவரது உடல் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் சா்தாா் வல்லபபாய் படேல் சா்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏா் இ... மேலும் பார்க்க

கேரளத்தில் கனமழை: 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

கேரளத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாகக் கனமழை பெய்து வருவதால், 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் பருவமழை தொடங்கியுள்ளதாலும், கர்நாடக கடல்பகுதியில் நிலவும் சுழற்சி... மேலும் பார்க்க

ஈரான் வாழ் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு

ஈரான்- இஸ்ரேல் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் ஈரான் வாழ் இந்தியர்களுக்கு அவசரகால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 98 9128109115, 98 9128109109 ஆகிய எண்களில் இந்தியர்கள் தொடர்பு கொள்ளலாம்... மேலும் பார்க்க

இனிமேல் ஏர் இந்தியாவில் பயணிக்க மாட்டேன்: டேவிட் வார்னர்

முன்னாள் ஆஸி. வீரர் டேவிட் வார்னர் தான் இனிமேல் ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்க மாட்டேன் எனக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர்... மேலும் பார்க்க