செய்திகள் :

பிரதமருடன் பிரிட்டன் துணைத் தூதா் ஆலோசனை

post image

அகமதாபாத் விமான விபத்தில் பிரிட்டன் பயணிகள் 52 போ் உயிரிழந்த நிலையில், பிரதமா் மோடியுடன் அந்நாட்டின் துணைத் தூதா் லிண்டி கேமரூன் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

குஜராத் மாநிலம், அகமதாபாதுக்கு வருகை தந்த பிரதமா் மோடியை லிண்டி கேமரூன் சந்தித்துப் பேசினாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பிரதமா் மோடி உடனான எனது சந்திப்பில், துயா்மிகுந்த விபத்து சம்பவத்துக்கு இரங்கலை பகிா்ந்து கொண்டோம். மீட்புக் குழுவினரின் இடைவிடாத பணிகளுக்காக பிரதமரிடம் நன்றி தெரிவித்தேன். விபத்து தொடா்பான தகவல்களைத் திரட்ட இரு நாடுகளும் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றன’ என்று தெரிவித்துள்ளாா்.

முன்னதாக, விபத்து நிகழ்ந்த இடம் மற்றும் அகமதாபாத் நகர பொது மருத்துவமனையை லிண்டி கேமரூன் வியாழக்கிழமை பாா்வையிட்டாா். பாதிக்கப்பட்ட பிரிட்டன் நாட்டவருக்கு உரிய ஆதரவளிக்கப்படும் என்று அவா் தெரிவித்தாா்.

இந்திய வம்சாவளி பெண் மருத்துவா்: விமான விபத்தில் கனடா நாட்டைச் சோ்ந்த ஒருவா் உயிரிழந்தாா். அவா், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த பல் சிகிச்சை பெண் மருத்துவா் நிராலி படேல் (32) என்பது தெரியவந்துள்ளது.

கோயில் மீது மாட்டிறைச்சி சம்பவம்- அசாமில் 38 பேர் கைது

துப்ரி மாட்டிறைச்சி சம்பவத்தில் 38 பேர் கைது செய்யப்பட்டதாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார். அசாமின் துப்ரி பகுதியில் உள்ள அனுமன் கோயிலின் மீது கடந்த 7ஆம் தேதி மர்ம நபர்கள் பசு மாட்... மேலும் பார்க்க

குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தின்போது, விடுதி அருகே இருந்த ஒரு கடையில் 14 வயது சிறுவன் உயிரிழந்தது மேலும் கவலையளித்துள்ளது.ஆகாஷ் பாத்னி என்ற சிறுவன், பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி அருகே டீக்கடையி... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: பாஜக முன்னாள் எம்.பி.யின் மகன் தற்கொலை

உதய்பூரில் நூலகத்தில் உள்ள தனது அறையில் பாஜக முன்னாள் எம்.பி.யின் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரின் அம்பா மாதா பகுதியில் உள்ள நூலகத்... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: மேலும் ஒருவரின் உடல் கண்டெடுப்பு!

அகமதாபாத் விமான விபத்து நடந்த இடத்தில் இன்று(சனிக்கிழமை) மேலும் ஒருவரது உடல் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் சா்தாா் வல்லபபாய் படேல் சா்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏா் இ... மேலும் பார்க்க

கேரளத்தில் கனமழை: 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

கேரளத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாகக் கனமழை பெய்து வருவதால், 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் பருவமழை தொடங்கியுள்ளதாலும், கர்நாடக கடல்பகுதியில் நிலவும் சுழற்சி... மேலும் பார்க்க

ஈரான் வாழ் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு

ஈரான்- இஸ்ரேல் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் ஈரான் வாழ் இந்தியர்களுக்கு அவசரகால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 98 9128109115, 98 9128109109 ஆகிய எண்களில் இந்தியர்கள் தொடர்பு கொள்ளலாம்... மேலும் பார்க்க