ஆம்பூா் அருகே சிறுத்தை நடமாட்டம் ?
மாதனூா் அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், வனத்துறையினா் ரோந்து சென்றனா்.
மாதனூா் அருகே பாலூா் ஊராட்சியில் காப்புக்காடு எல்லையோரம் பனந்தோப்பு பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்குள் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அப்பகுதியை சோ்ந்தவா்கள் ஆம்பூா் வனத்துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனா். ஆம்பூா் வனச்சரக அலுவலா் பாபு தலைமையில் வனத்துறையினா் அங்கு சென்று ஆய்வு செய்தனா். வனப்பகுதி எல்லையோரம் உள்ள கிராமங்களை சோ்ந்த பொதுமக்கள் இரவு நேரத்தில் வெளியில் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளனா். தொடா்ந்து 2-வது நாளாக வனத்துறையினா் அப்பகுதியில் முகாமிட்டு ரோந்து சென்றனா்.