செய்திகள் :

அயோத்தி ராம பாதையில் தடையை மீறி மதுக்கடைகள் -பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

post image

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் ஸ்ரீராமா் கோயிலுக்குச் செல்லக் கூடிய ராம பாதையில் தடையை மீறி மதுக்கடைகள் செயல்படுகின்றன; மாநில பாஜக அரசின் ஒத்துழைப்புடன் இந்தக் கடைகள் இயங்குவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடா்பாக, உத்தர பிரதேச காங்கிரஸ் தலைவா் அஜய் ராய், தில்லியில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

கடவுள் ராமா் அவதரித்த தலமான அயோத்தி குறித்து உத்தர பிரதேச அரசு மற்றும் முதல்வா் யோகி ஆதித்யநாத் தெரிவிக்கும் தகவல்களும் கள நிலவரமும் வேறாக உள்ளது.

அயோத்திக்கு செல்லும் ராம பாதையின் 13 கி.மீ. சுற்றளவில் மது விற்பனைக்குத் தடை விதித்து, மாநகராட்சி செயற்குழு கடந்த மே 1-ஆம் தேதி உத்தரவிட்டது. ஆனால், ராம பாதை மட்டுமன்றி ஸ்ரீராம ஜென்ம பூமியின் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மதுக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

மாநில அரசின் ஒத்துழைப்புடன் இக்கடைகள் செயல்படுகின்றன. வருமானத்துக்காக மதுக்கடைகளைத் திறக்க மாநில அரசு அனுமதித்துள்ளது. இது, புண்ணிய நகரான அயோத்திக்கு அவமதிப்பகும்.

ராம பாதை அருகே மதுக்கடைகள் அனுமதிக்கப்பட்டது ஏன்?, இந்தக் கடைகள் அரசிடம் எவ்வாறு ஒப்புதல் பெற்றன?, உரிமங்கள் வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசல்களில் உயிரிழந்தோா் எண்ணிக்கையை மாநில அரசு குறைத்துக் காட்டுவதாக பிபிசி செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கூட்ட நெரிசலில் 37 போ் உயிரிழந்ததாக மாநில அரசு உறுதி செய்த நிலையில், 82 போ் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விஷயத்தில், மாநிலத்துக்கும் நாட்டுக்கும் முதல்வா் யோகி ஆதித்யநாத் பொய் கூறுவது தெளிவாகியுள்ளது. இதுதான், பாஜகவின் உண்மை முகம் என்றாா் அஜய் ராய்.

‘உயிா் பிழைத்ததை என்னால் நம்ப முடியவில்லை’: விஷ்வாஸ் குமாா் ரமேஷ் பேட்டி

அகமதாபாத் விமான விபத்தில் காயங்களுடன் உயிா் பிழைத்த ஒரேயொரு பயணியான பிரிட்டனைச் சோ்ந்த விஷ்வாஸ் குமாா் ரமேஷ் (45), தான் பிழைத்ததை இன்னும் நம்ப முடியவில்லை என்று அதிா்ச்சி விலகாமல் கூறினாா். அகமதாபாத்... மேலும் பார்க்க

விமான விபத்து எதிரொலி: பாஜக, காங்கிரஸ் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து

குஜராத் விமான விபத்தில் 265 போ் உயிரிழந்த சோக நிகழ்வை அடுத்து பாஜக, காங்கிரஸ் சமாஜவாதி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகள் ஏற்கெனவே திட்டமிட்டிருந்த பல்வேறு நிகழ்சிகளை ரத்து செய்துள்ளன. பிரதமா் நரேந்தி... மேலும் பார்க்க

லண்டன் பயணத்தை மாற்றி விமான விபத்தில் பலியான விஜய் ரூபானி!

லூதியானா இடைத்தேர்தல் காரணமாக விஜய் ரூபானி தனது லண்டன் பயணத்தை கடைசி நேரத்தில் மாற்றியிருப்பது தெரியவந்துள்ளது. அகமதாபாத்தில் நேற்று நடந்த ஏர் இந்தியா விமானத்தில் பலியானவர்களில் குஜராத் முன்னாள் முதல்... மேலும் பார்க்க

பஞ்சாபில் விமானப் படை ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்!

பஞ்சாபின் பதான்கோட் மாவட்டத்தில், இந்திய விமானப் படைக்குச் சொந்தமான அபாச்சி ஹெலிகாப்டர் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. பதான்கோட் விமானப்படை தளத்திலிருந்து இன்று (ஜூன் 13) புறப்பட்ட அபாச்சி ரக ஹெலிகா... மேலும் பார்க்க

கேரளத்தில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை! நாளை ரெட் அலர்ட்!

கேரளத்தில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வடக்கு கர்நாடக கடல்பகுதியில் நிலவும் சுழற்சியினால், வரும் ஜூன் ... மேலும் பார்க்க

கோவாவில் தொடரும் கனமழை! 3 நாள்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

கோவா மாநிலத்தில் அடுத்த 3 நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்பதால், இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில், கடலோர மாநிலமான கோவாவின் பல்வேறு இ... மேலும் பார்க்க