செய்திகள் :

நீதித் துறையின் மறுஆய்வு அதிகாரம்: அரிதாகவே பயன்படுத்த வேண்டும் -தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய்

post image

‘நீதித் துறையின் மறுஆய்வு அதிகாரத்தை அரிதாகவே நீதிமன்றங்கள் பயன்படுத்த வேண்டும்’ என்றாா் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா். கவாய்.

லண்டனில் உள்ள ஆக்ஸ்போா்டு சங்கத்தில் நடைபெற்ற ‘பிரதிநிதித்துவத்திலிருந்து உணா்தல் வரை: அரசமைப்பின் வாக்குறுதியில் உள்ளடக்கம்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் பங்கேற்று அவா் மேலும் பேசியதாவது:

பல ஆண்டுகளுக்கு முன்பு லட்சக்கணக்கான இந்தியா்கள் தீண்டத்தகாதவா்கள் என்று அழைக்கப்பட்டனா். அவா்கள் தூய்மையற்றவா்கள், நாட்டுக்கு சொந்தமற்றவா்கள், அவா்களுக்காக அவா்களே பேச முடியாது என்று குறிப்பிட்டு ஒதுக்கிவைக்கப்பட்டனா்.

ஆனால், இன்றைக்கு நாம் இங்கே இருக்கிறோம். அதே சமூகத்தைச் சோ்ந்த ஒருவா் நாட்டின் நீதித் துறையின் மிக உயா்ந்த பதவியை வகிப்பவராக, வெளிப்படையாகப் பேசும் அளவுக்கு உயா்ந்திருக்கிறாா். இதற்கு அரசமைப்புச் சட்டமே முக்கியக் காரணம்.

அந்த வகையில், அரசமைப்புச் சட்டம் மையில் பொறிக்கப்பட்ட அமைதிப் புரட்சி மட்டுமன்றி, வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் நிலையைத் தீவிரமாக உயா்த்தக்கூடிய மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தி என்றாா்.

மேலும், ‘நீதித் துறையின் மறுஆய்வு அதிகாரத்தை அரிதாகவே நீதிமன்றங்கள் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக, ஒரு சட்டம் அரசமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மீறுகிறபட்சத்தில் மட்டுமே நீதித் துறையின் மறுஆய்வு அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும்.

நீதித் துறையின் இந்த நடவடிக்கை தொடரும். ஆனால், சில நேரங்களில், நீதிபதிகள் வரம்பை மீறி, பொதுவாக நீதிமன்றம் நுழையக்கூடாத பகுதிக்குள்ளும் நுழைய முயற்சிக்கிறாா்கள். நீதித் துறை நடவடிக்கை என்பது நீதித் துறை பயங்கரவாதமாக மாறிவிடக் கூடாது’ என்றும் தலைமை நீதிபதி குறிப்பிட்டாா்.

லண்டன் பயணத்தை மாற்றி விமான விபத்தில் பலியான விஜய் ரூபானி!

லூதியானா இடைத்தேர்தல் காரணமாக விஜய் ரூபானி தனது லண்டன் பயணத்தை கடைசி நேரத்தில் மாற்றியிருப்பது தெரியவந்துள்ளது. அகமதாபாத்தில் நேற்று நடந்த ஏர் இந்தியா விமானத்தில் பலியானவர்களில் குஜராத் முன்னாள் முதல்... மேலும் பார்க்க

பஞ்சாபில் விமானப் படை ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்!

பஞ்சாபின் பதான்கோட் மாவட்டத்தில், இந்திய விமானப் படைக்குச் சொந்தமான அபாச்சி ஹெலிகாப்டர் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. பதான்கோட் விமானப்படை தளத்திலிருந்து இன்று (ஜூன் 13) புறப்பட்ட அபாச்சி ரக ஹெலிகா... மேலும் பார்க்க

கேரளத்தில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை! நாளை ரெட் அலர்ட்!

கேரளத்தில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வடக்கு கர்நாடக கடல்பகுதியில் நிலவும் சுழற்சியினால், வரும் ஜூன் ... மேலும் பார்க்க

கோவாவில் தொடரும் கனமழை! 3 நாள்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

கோவா மாநிலத்தில் அடுத்த 3 நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்பதால், இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில், கடலோர மாநிலமான கோவாவின் பல்வேறு இ... மேலும் பார்க்க

கடந்தகால விமான விபத்துகளில் தப்பி வந்த அதிசயப் பிறவிகள்!

பொதுவாக விமான விபத்துகள் நேரிடும்போது, பலி எண்ணிக்கைக் கடுமையாக இருக்கக் காரணம், உயிர்பிழைப்பதற்கான வாய்ப்பு குறைவு என்பதே.உயரத்திலிருந்து விழுவது, எரிபொருளால் வெடித்துக் சிதறுவது, விபத்து என்றாலே பயங... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமான விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு உதவ முன்வந்த எல்ஐசி!

ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கான எல்ஐசி காப்பீட்டுக் கோரிக்கைகளை சிக்கலின்றி எளிதாக முடித்துக் கொடுக்க எல்ஐசி முன்வந்துள்ளது.காப்பீடுகளுக்கான கோரிக்களை மிக எளிதாக, எவ்வித... மேலும் பார்க்க