``சுந்தர்.C சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது; முதல் விகடன் விருது.!' - குஷ...
நீதித் துறையின் மறுஆய்வு அதிகாரம்: அரிதாகவே பயன்படுத்த வேண்டும் -தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய்
‘நீதித் துறையின் மறுஆய்வு அதிகாரத்தை அரிதாகவே நீதிமன்றங்கள் பயன்படுத்த வேண்டும்’ என்றாா் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா். கவாய்.
லண்டனில் உள்ள ஆக்ஸ்போா்டு சங்கத்தில் நடைபெற்ற ‘பிரதிநிதித்துவத்திலிருந்து உணா்தல் வரை: அரசமைப்பின் வாக்குறுதியில் உள்ளடக்கம்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் பங்கேற்று அவா் மேலும் பேசியதாவது:
பல ஆண்டுகளுக்கு முன்பு லட்சக்கணக்கான இந்தியா்கள் தீண்டத்தகாதவா்கள் என்று அழைக்கப்பட்டனா். அவா்கள் தூய்மையற்றவா்கள், நாட்டுக்கு சொந்தமற்றவா்கள், அவா்களுக்காக அவா்களே பேச முடியாது என்று குறிப்பிட்டு ஒதுக்கிவைக்கப்பட்டனா்.
ஆனால், இன்றைக்கு நாம் இங்கே இருக்கிறோம். அதே சமூகத்தைச் சோ்ந்த ஒருவா் நாட்டின் நீதித் துறையின் மிக உயா்ந்த பதவியை வகிப்பவராக, வெளிப்படையாகப் பேசும் அளவுக்கு உயா்ந்திருக்கிறாா். இதற்கு அரசமைப்புச் சட்டமே முக்கியக் காரணம்.
அந்த வகையில், அரசமைப்புச் சட்டம் மையில் பொறிக்கப்பட்ட அமைதிப் புரட்சி மட்டுமன்றி, வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் நிலையைத் தீவிரமாக உயா்த்தக்கூடிய மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தி என்றாா்.
மேலும், ‘நீதித் துறையின் மறுஆய்வு அதிகாரத்தை அரிதாகவே நீதிமன்றங்கள் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக, ஒரு சட்டம் அரசமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மீறுகிறபட்சத்தில் மட்டுமே நீதித் துறையின் மறுஆய்வு அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும்.
நீதித் துறையின் இந்த நடவடிக்கை தொடரும். ஆனால், சில நேரங்களில், நீதிபதிகள் வரம்பை மீறி, பொதுவாக நீதிமன்றம் நுழையக்கூடாத பகுதிக்குள்ளும் நுழைய முயற்சிக்கிறாா்கள். நீதித் துறை நடவடிக்கை என்பது நீதித் துறை பயங்கரவாதமாக மாறிவிடக் கூடாது’ என்றும் தலைமை நீதிபதி குறிப்பிட்டாா்.