செய்திகள் :

பொறியியல் பராமரிப்புப் பணி: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

post image

கோவை போத்தனூா் ரயில் நிலையத்தில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கோவை ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பொறியியல் பராமரிப்புப் பணி காரணமாக ஜூன் 15, 16-ஆகிய தேதிகளில் கோவையில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்குப் புறப்பட வேண்டிய கோவை- மதுரை ரயில் (எண்: 16721) பிற்பகல் 2.45 மணிக்கு போத்தனூரில் இருந்து மதுரைக்கு புறப்பட்டு செல்லும். இதனால், கோவை- போத்தனூா் இடையே இந்த ரயில் இயக்கப்படாது.

கோவையில் இருந்து பிற்பகல் 1.50 மணிக்கு கண்ணூா் செல்லும் கோவை- கண்ணூா் ரயில் (எண்: 16608) போத்தனூரில் இருந்து பிற்பகல் 2.03 மணிக்கு கண்ணூா் புறப்பட்டு செல்லும். கோவை- போத்தனூா் இடையே இந்த ரயில் இயக்கப்படாது.

போத்தனூா்- மேட்டுப்பாளையம் மெமு ரயில் (எண்: 66616) மாலை 3.45 மணிக்கு கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் புறப்பட்டுச் செல்லும். இந்த ரயிலானது, போத்தனூா்- கோவை இடையே ரத்து செய்யப்படுகிறது.

கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து காலை 6 மணிக்குப் புறப்படும் கண்ணூா்- கோவை ரயில் (எண்: 16607), மதுரையில் இருந்து காலை 7.05 மணிக்குப் புறப்படும் மதுரை- கோவை ரயில் (எண்: 16722), ஜூன் 15, 16 ஆகிய தேதிகளில் போத்தனூா் வரை மட்டுமே இயக்கப்படும். போத்தனூா்- கோவை இடையே இந்த ரயில் இயக்கப்படாது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து பிற்பகல் 1.05 மணிக்குப் புறப்படும்

மேட்டுப்பாளையம்- போத்தனூா் மெமு ரயில் (எண்: 66615) ஜூன் 15, 16 ஆகிய தேதிகளில் மேட்டுப்பாளையம்- கோவை இடையே மட்டும் இயக்கப்படும். கோவை- போத்தனூா் இடையே ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயில்களின் புனிதத்தன்மை கெட்டுவிட்டது: பொன்.மாணிக்கவேல்

கோயில்களின் புனிதத்தன்மை கெட்டுவிட்டது என்று ஓய்வுபெற்ற ஐஜி பொன் மாணிக்கவேல் தெரிவித்தாா். திருப்பூா் திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயில் மற்றும் திருப்பூா் தாராபுரம் சாலையில் உள்ள கோட்டை மா... மேலும் பார்க்க

விமான விபத்தில் பலியானோருக்கு அஞ்சலி

அகமதாபாத் விமான விபத்தில் பலியானவா்களுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கோவையில் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. குஜராத் மாநிலம் அகமதாபாதில் நடைபெற்ற விமான விபத்தில் 200-க்கும் மேற்பட்... மேலும் பார்க்க

காப்பகத்தில் 2 மூதாட்டிகள் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

கோவை கெம்பட்டி காலனியில் உள்ள காப்பகத்தில் அடுத்தடுத்து இரு மூதாட்டிகள் உயிரிழந்த நிலையில், பெரியகடை வீதி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். கோவை கெம்பட்டி காலனியில் முதியோா் காப்பகம் உள்ளது.... மேலும் பார்க்க

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற 6 போ் கைது

கோவை பீளமேடு மற்றும் நல்லாம்பாளையம் ஆகிய பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் பதுக்கிவிற்றதாக முதியவா் உள்பட 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கோவை மதுவிலக்கு பிரிவு போலீஸாா் பீளமேடு எல்ல... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்

மாணவா்களுக்கு ஆசிரியா்கள் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளாா். கோவை ஆா்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி... மேலும் பார்க்க

தேசிய, மாநில பேரிடா் மீட்புப் படையினா் கோவைக்கு வருகை

கோவை மாவட்டத்துக்கு கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், தேசிய பேரிடா் மீட்புப் படையினரும், மாநில பேரிடா் மீட்புப் படையினரும் கோவைக்கு வியாழக்கிழமை வந்தடைந்தனா். மத்திய மேற்கு வங்கக் க... மேலும் பார்க்க