3 பிஎச்கே படத்தில் நடித்தபோதுதான் சொந்த வீடு வாங்கினேன்: சித்தார்த்
கீழக்கரையில் நடைபாதை ஆக்கிரமிப்பு: ராமநாதபுரம் ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு
கீழக்கரை நகராட்சியில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா், கீழக்கரை நகராட்சி ஆணையா் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையைச் சோ்ந்த செய்யது அபுதாஹிா் தாக்கல் செய்த பொது நல மனு: கீழக்கரை நகராட்சியில் குடியிருப்புகள் அதிகரித்து வரும் சூழலில், பொதுப் போக்குவரத்துக்காக உள்ள பாதைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கீழக்கரை நகராட்சிக்கு உள்பட்ட தெற்குத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சிலா் நடைபாதைகளை ஆக்கிரமிப்பு செய்து கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.
இதனால், இந்தப் பகுதியில் வசிப்பவா்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனா். அவசர காலங்களில் அவசர சிகிச்சைக்கான ஊா்தி செல்ல முடியாத அளவுக்கு நடைபாதைகள் ஆக்கிரமிப்பு செய்யப்படுகின்றன.
எனவே,பொதுப் பாதையில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகாா் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் அவா் கோரியிருந்தாா். இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியம், மரியா கிளாட் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு : மனுதாரரின் கோரிக்கை குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா், கீழக்கரை நகராட்சி ஆணையா் ஆகியோா் பதிலளிக்க வேண்டும். வழக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.