செய்திகள் :

`எவரெஸ்ட் பனி மலையில் பிடிபட்ட ராஜநாகங்கள்' - எச்சரிக்கும் காலநிலை; சூழல் விஞ்ஞானிகள் அஞ்சுவது ஏன்?

post image

நேபாளம் நாட்டில் எவெரெஸ்ட் மலைக்கு அருகில் 9 ராஜநாகம் மற்றும் ஒரு ஒற்றைக் கண் நாகம் (Monocled cobra) என10 விஷ பாம்புகள் ஒன்றரை மாத இடைவெளியில் பிடிபட்டுள்ள நிகழ்வு சூழல் விஞ்ஞானிகளை கவலைக்குள்ளாக்கியிருக்கிறது.

இந்த நாகங்கள் கோபாலேஷ்வர், பன்ஜியாங், சோகோல் மற்றும் ஃபுல்சௌக் ஆகிய நான்கு பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் பிற வளாகங்களிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. உள்ளூர் மக்கள் ராஜநாகத்தின் புற்றையும் முட்டைகளையும் கண்டுபிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Everest
Everest

ராஜநாகம் உலகிலேயே நீளமான விஷப் பாம்பு ஆகும். மற்ற பாம்புகளின் விஷத்தை ஒப்பிடுகையில் இவற்றின் விஷம் மிகவும் சக்திவாய்ந்தது இல்லை என்றாலும் ஒரே கடியில், 20 பேரை அல்லது ஒரு வளர்ந்த யானையைக் கொல்லும் அளவுக்கு அதிக விஷத்தை வெளியிடும்.

இந்த நாகங்கள் அழிந்துவரும் உயிரினமாக நேபாளத்தின் தேசிய சிவப்பு தரவு புத்தகம் மற்றும் சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியத்தின் (IUCN) சிவப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

அறிவியலாளர்கள் அஞ்சுவது ஏன்?

ராஜ நாகங்களும் ஒற்றைக் கண் நகமும் தெற்கு நேபால் மற்றும் வட இந்தியாவில் உள்ள தாராய் பகுதிகளில் வசிப்பவை. வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க அவை மலைப்பிரதேசங்களை நோக்கி நகன்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

Climate Change Protest

கடந்த சில ஆண்டுகளாக நேபாளம் காலநிலை மாற்றத்தால் மோசமான வானிலை நிகழ்வுகளைச் சந்தித்து வருகிறது. அங்கு அதிகபட்ச வெப்பநிலை ஆண்டுக்கு 0.5% என்ற அளவில் அதிகரித்து வருகிறது.

ராஜ நாகங்களின் வாழ்விடங்கள் அழிந்துவருவதால், மனிதர்கள் - பாம்புகள் மோதல் அடிக்கடி நடைபெற்றுவருகிறது. ஒவ்வொரு ஆண்டும், நேபாளத்தின் தாராய் பகுதியைச் சேர்ந்த சுமார் 2,700 பேர், பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் பெண்கள், பாம்புக்கடியால் இறக்கின்றனர்.

மார்ச் 2022-ல் முன்னணி சர்வதேச மருத்துவ இதழான தி லான்செட்டில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை, கோடைகாலத்தில் தாராய் பகுதிகளில் பாம்புக்கடியால் மக்கள் இறப்பது சகஜமாகி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Tardigrades: விண்வெளியில் 'நீர் கரடிகள்' குறித்து ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் - ஏன் தெரியுமா?!

விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) இரண்டு வாரங்கள் தங்கியிருக்கும்போது மேற்கொள்ளும் அறிவியல் பரிசோதனைகளில், டார்டிகிரேடுகள் குறித்து ஆராய்வதும் அடங்கும். டார்டிகிரேடுகள் ... மேலும் பார்க்க

US-China: ``சீன பூஞ்சை Covid-ஐ விட மோசமானது; போருக்கு சமம்..'' - அமெரிக்க நிபுணர் சொல்வது என்ன?

சீனாவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு கடத்திச் செல்லப்பட்ட பூஞ்சை, வேளாண்-பயங்கரவாத ஆயுதமாக செயல்பட சாத்தியமுள்ளது என அமெரிக்க நீதித்துறைத் தெரிவித்துள்ளது. புசாரியம் கிராமினேரம் (Fusarium gra... மேலும் பார்க்க

சர்வதேச விண்வெளி நிலையத்திற்குப் போகும் முதல் இந்தியர் - யார் இந்த சுபான் ஷு சுக்லா?

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவுடன் இணைந்து 2025ல் `ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்- 4' என்ற திட்டத்தை செயல்படுத்தியது. அதன்படி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வீர... மேலும் பார்க்க

Space: "விண்வெளியிலிருந்து சிக்னல் அனுப்பும் 'மர்ம' பொருள்" - அறிவியலாளர்கள் சொல்வது என்ன?

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வானியலாளர்கள் ஒவ்வொரு 44 நிமிடங்களுக்கும் ஒருமுறை பிரபஞ்சத்திலிருந்து மர்மப் பொருளொன்று பூமிக்கு எக்ஸ்-ரே மற்றும் ரேடியோ சிக்னல்களை அனுப்புவதாகக் கண்டறிந்துள்ளனர்.இது இன்றுவரை ... மேலும் பார்க்க

மன அழுத்தத்தை அளவிட ”இ-டாட்டூவை” அறிமுகப்படுத்திய ஆராய்ச்சியாளர்கள்! - எப்படி செயல்படும் தெரியுமா?

மன அழுத்தத்தை அளவிடக்கூடிய ஒரு மின்னணு பச்சை குத்தலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இதனை இ-டாட்டூ என்கின்றனர். பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் மனித வாழ்க்கை முறையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள... மேலும் பார்க்க

`தங்கமாக மாறிய ஈயம்' - செயற்கை தங்கம் கண்டுபிடிப்பும் வரலாறும்.. இனி தங்கம் விலை?

`செயற்கை தங்கம்' எப்படி உருவாக்கப்பட்டது?ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் செயற்கையாக மிக நுண்ணிய அளவில் தங்கத்தை உற்பத்தி செய்துள்ளனர். இப்படி உருவான தங்கம் ஒரு வினாடிக்குள் தன்னை மாய்த்துக் கொண்டது. எப்படி... மேலும் பார்க்க