செய்திகள் :

என் உருவபடத்தை வைத்து உற்சவம் செய்கிறார் அன்புமணி: ராமதாஸ் பேட்டி

post image

திண்டிவனம்: உயிருள்ள என்னை எல்லா வகையிலும் உதாசினம் செய்துவிட்டு என் உருவபடத்தை வைத்து உற்சவம் செய்கின்றனர். என்னை நடைபினமாக்கி, என் பெயரில் நடைபயனம் செய்யப் போகிறார்களாம். இவை எல்லாம் நாடகமே என பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் தெரிவித்தார்.

திண்டிவனத்தில் அவர் வியாழக்கிழமை செய்தியாளர்களுடன் பேசியதாவது:

ஒவ்வொரு செங்கலாக கட்டிய கட்சி என்ற மாளிகையில் நான் குடியமர்த்தியவரே என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் அளவுக்கு அன்புமணி செயல்பாடுகள் இருந்தன என்று ராமதாஸ் தெரிவித்தார்.

பாமகவில் ராமதாஸ் - அன்புமணி இருவருக்கும் இடையே கருத்து மோதல் நீடித்து வருவதால் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் பெரும் குழப்பமும், கவலையும் ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸை அன்புமணி நேரில் சந்தித்து பேசினார். ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டவில்லை. பின்னர் சென்னை வந்த ராமதாஸ் அன்புமணியை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பார்க்காமலே சென்றுவிட்டார்.

இந்த நிலையில், தைலாபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் ராமதாஸ் செய்தியாளர்களுடன் பேசினார். அப்போது, எனக்கும், செயல் தலைவர் அன்புமணிக்கு இடையில் நடந்து கொண்டிருக்கும் பிரச்னை உங்கள் யாருக்கும் முழுமையாக தெரிய வாய்ப்பில்லை. பாமக பிரச்னையில் 2 சிறந்த ஆளுமைகள் மூலமாக சமரச பேச்சுவார்த்தை நடந்ததாகவும், அந்த பேச்சுவார்த்தை டிராவில் முடிந்துவிட்டது.

அதற்கு முன்பாக 16 பஞ்சாயத்துகள் நடந்தது. நான் தொடங்கியது 34 அமைப்புகளை சேர்ந்தவர்களே எனக்கு பஞ்சாயத்து செய்ய வந்தார்கள். அதை தலைவிதி என ஏற்றுக்கொண்டேன். பஞ்சாயத்து செய்த அனைவரும் ஒரே விதமான தீர்ப்பையே சொன்னார்கள். என்ன தீர்ப்பு என்றால் நான் இங்கே இருந்துக் கொண்டு கட்சி வளர்ப்பது, அவர் வெளியே சென்று கட்சி வளர்ப்பது என்ற தீர்ப்புதான்.

நீயா?, நானா? பார்த்துவிடுகிறேன்

அன்புமணிக்கு தலைவர் பதவியை விட்டுத்தர தயார் என கூறினேன். மாநாட்டிற்கு முன்பாக அன்புமணியை பார்த்துவிட்டு வாருங்கள், தலைவர் பதவியை விட்டுத்தருகிறேன் என கெளரவ தலைவரை அனுப்பினேன். மாநாடு மேட்டையிலேயே கையெழுத்து போட்டுதர தயாராக இருப்பதாக கூறினேன். அதற்கும் ஏற்கவில்லை. அதனால் இயற்கையான கோபம் வந்து நீயா?, நானா? பார்த்துவிடுவோம் என முடிவு வந்துவிட்டேன் என்றவர் இன்னும் ஓரிரு ஆண்டுகள் தலைமையேற்க என உரிமை இல்லையா? என கேள்வி எழுப்பினார்.

அன்புமணிக்கு அதிகாரம் தானாக வந்திருக்கும்

மாவட்ட செயலாளர்கள் வருகையை தடுத்து நிறுத்தி, என்னை மானபங்கம் செய்தார். அதிகாலை 3 மணி வரை நிர்வாகிகளிடம் தொலைப்பேசியில் பேசி போகாதே என சொல்லியுள்ளார். அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து என்னை எடுக்கப்போகிறார் என பொய்யான தகவலை சொல்லியுள்ளார். இதனை மூர்கன், மூடன் தான் செய்வான்.

தந்தைக்குப் பிறகே தனயன்

குருவை மிஞ்சிய சீடன் இருக்கலாம், தந்தையை மிஞ்சிய தனயன் கூடாது. இதுவே தர்மம். இதுவே சார்ஸ்த்திர சம்பிரதாயம் ஆகும். உயிருள்ள என்னை எல்லா வகையிலும் உதாசினம் செய்துவிட்டு என் உருவபடத்தை வைத்து உற்சவம் செய்கின்றனர். என்னை நடைபினமாக்கி, என் பெயரில் நடைபயனம் செய்யப் போகிறார்களாம். இவை எல்லாம் நாடகமே என்றார்.

தேர்தல் முடியும் வரை நான் தாந் தலைவர். பிறகு வேண்டுமாநால் அவர் இருக்கட்டும். கூட்டணி குறித்து நான்தான் முடிவு செய்வேன். அன்று அமைதி காத்திருந்தால் அன்புமணிக்கு அதிகாரம் தானாக வந்திருக்கும் என்றார்.

மேலும், 7 ஆண்டுகளுக்கு முன்பே கட்சியை நான் பாத்துக் கொள்கிறேன் என்று அன்புமணி கூறினார். அவருக்கு அப்போதே அந்த எண்ணம் இருந்திருக்கிறது.

நம் குடும்ப பெண்களுக்கு அரசியல் வேண்டாம்

நமது குடும்ப பெண்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது என்று செளமியாவிடம் கூறினேன், மக்களவைத் தேர்தலின் போது என்னிடம் கெஞ்சி கூத்தாடி செளமியாவை வேட்பாளராக அறிவித்தார்கள் என்று கூறிய ராமதாஸ், செளமியா தன் பேச்சிற்கு எதிர்மாறாக செயல்பட்டதாகவும் விமர்சித்துள்ளார்.

அரசியலில் வாரிசு இல்லை

அரசியலில் வாரிசு இல்லை. யாரிடமும் கட்சியை ஒப்படைக்கலாம் என்று ராமதாஸ் கூறினார்.

மேட்டூா் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீரை திறந்து வைத்தார் முதல்வா் ஸ்டாலின்!

விஜய் ரூபானிக்கு அதிர்ஷ்ட எண்ணே துரதிர்ஷ்டமாக மாறிய சோகம்!

அகமதாபாத்: அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமானத்தில் பலியானவர்களில் குஜராத் முன்னாள் முதல்வரும் பாஜகவின் மூத்தத் தலைவரான விஜய் ரூபானியும்(68) ஒருவர். லண்டனில் உள்ள தனது மகளைச் சந்திப்பதற்காக விமானத்... மேலும் பார்க்க

விமான விபத்து: கருப்புப் பெட்டி மீட்பு!

அகமதாபாத்: இரண்டு என்ஜின்களும் செயலிழந்தது அல்லது புறப்பட்ட சிறிது நேரத்தில் பறவை மோதியது, ஏா் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதற்கு காரணமாக இருக்கலாம் என்று விமானத் துறை நிபுணா்கள் தெரிவித்த நிலையில்... மேலும் பார்க்க

நத்தம் அருகே சாலை தடுப்பில் லாரி மோதி விபத்து: நல்வாய்ப்பாக உயிர் தப்பிய ஓட்டுநர்!

நத்தம் அருகே சாலை தடுப்பில் ஓடுகள் ஏற்றி வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானதில், ஆனால் ஓட்டுநர் நல்வாய்ப்பாக காயங்கள் ஏதுவுமின்றி உயிர் தப்பினார். அடிக்கடி சாலை தடுப்புகளால் தொடரும் விபத்துகளால் மக்கள் அ... மேலும் பார்க்க

ரூ.73 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.8 உயா்ந்து ரூ.72,808-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடித்து வந்த நிலையில், கடந... மேலும் பார்க்க

தனியாா் முதியோா் காப்பகத்தில் உணவருந்திய மேலும் ஒருவர் உயிரிழப்பு

சுரண்டை: தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்தில் உள்ள தனியாா் முதியோா் காப்பகத்தில் மாமிச உணவருந்திய 3 போ் உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவர் வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தை அடுத்து உயிரிழப்பு 4 ஆக உயர... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நிலவரம்!

மேட்டூா்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,339 கன அடியிலிருந்து 6,896 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட... மேலும் பார்க்க