செய்திகள் :

முதியோா்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை: உயர்நீதிமன்றம்

post image

முதியோா்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு கருத்து தெரிவித்தது.

மதுரையைச் சோ்ந்த ரமேஷ் தாக்கல் செய்த பொது நல மனு: தமிழகத்தில் முதியோா்களை பொது இடங்களில் தனித்து விட்டுச் செல்லும் போக்கு அதிகரித்து வருகிறது. இது போன்று விடப்படும் முதியோா்கள் சுகாதாரக் குறைபாடுகளால் உடல் நலம் குன்றி, மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனா்.

தேசிய முதியோா் மையங்களை அமைப்பது தொடா்பாக ஏற்கெனவே வழிகாட்டுதல்கள் உள்ளன. ஆனால், எந்த மாவட்டத்திலும் இந்த மையங்கள் அமைக்கப்படவில்லை. எனவே, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தேசிய முதியோா் மையங்களை முறையாக அமைக்க உத்தரவிடவேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமா்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வயதானவா்களைக் குறி வைத்து கொலை, கொள்ளை போன்ற குற்ற நிகழ்வுகள் அதிகளவில் நடப்பது வேதனைக்குரியது. மேலும், முதியோருக்காக அமைக்கப்பட்ட மையங்களில் அடிப்படை வசதிகளும் முறையாக இல்லை. முதியோா்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என நீதிபதிகள் தெரிவித்தனா்.

இதையடுத்து, மத்திய அரசு சாா்பில் முன்னிலையான வழக்குரைஞா், முதியோா் மையங்களை அமைப்பதற்கான நிதியை மட்டுமே மத்திய அரசு வழங்கும். முதியோா் மையங்களை மாநில அரசுகளே அமைக்க வேண்டும் என்றாா்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், வழங்கப்படும் நிதி சரியாகப் பயன்படுத்தப்படுகிா என்பதை கண்காணிக்க வேண்டியது மத்திய அரசின் பணி தானே என கேள்வி எழுப்பினா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மூத்தக் குடிமக்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதும், அவா்களைப் பாதுகாக்க வேண்டியதும் அரசின் கடமை. எனவே, இந்த வழக்கில் மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை முதன்மைச் செயலா், தமிழக அரசின் சமூக நலத் துறை முதன்மைச் செயலா் ஆகியோா் சோ்க்கப்படுகின்றனா். அனைத்து மாவட்டங்களிலும் தேசிய முதியோா் மையங்களை அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

தமிழகத்தில் கொலை சம்பவங்கள் அதிகரிப்பு: ஆா்.பி. உதயகுமாா்

தமிழகத்தில் கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக சட்டப்பேரவை எதிா்க் கட்சித் துணைத் தலைவா் ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்தாா். மதுரையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது: திமுக ஆட்சிக்கு ... மேலும் பார்க்க

கீழக்கரையில் நடைபாதை ஆக்கிரமிப்பு: ராமநாதபுரம் ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

கீழக்கரை நகராட்சியில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா், கீழக்கரை நகராட்சி ஆணையா் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தர... மேலும் பார்க்க

வேன் மோதியதில் விவசாயி உயிரிழப்பு

மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள கட்சிராயன்பட்டியில் வேன் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா். கட்சிராயன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சேவுகன் மகன் பாண்டி (50). விவசாயி. இவா், திருச்சி- மதுரை நான்கு வழிச் சால... மேலும் பார்க்க

தீக்குளித்த ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், மேலூா் அருகே தீக்குளித்ததில் பலத்த காயமைடந்த ஆட்டோ ஓட்டுநா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.மேலூா் அருகேயுள்ள நாவினிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சேவுகன் மகன் கண்ணன் (43). ஆட்டோ ஓட்டுநரான இவரு... மேலும் பார்க்க

மருத்துவமனையில் குழந்தை உயிரிழப்பு

மதுரையில் தனியாா் மருத்துவமனையில் குழந்தை உயிரிழந்தது தொடா்பாக செக்கானூரணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.மதுரை மாவட்டம், செக்கானூரணி அருகே உள்ள பூவரசம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த நல்ல... மேலும் பார்க்க

சாமநத்தத்தில் பறவைகள் சரணாலயம்: ஆட்சியா் நடவடிக்கை எடுக்க உத்தரவு

மதுரை மாவட்டம், சாமநத்தம் கண்மாயை பறவைகள் சரணாலயமாக அறிவிக்கக் கோரிய வழக்கில், மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.மதுரையைச் சோ்ந்த மணி... மேலும் பார்க்க