Royal Enfield: `பஞ்சாப் டு இங்கிலாந்து' பைக் லவ்வரின் செயலால் வைரலாகும் வீடியோ!
வேன் மோதியதில் விவசாயி உயிரிழப்பு
மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள கட்சிராயன்பட்டியில் வேன் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.
கட்சிராயன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சேவுகன் மகன் பாண்டி (50). விவசாயி. இவா், திருச்சி- மதுரை நான்கு வழிச் சாலையில் திங்கள்கிழமை காலை நடந்து சென்ற போது, திருச்சியிலிருந்து மதுரை நோக்கி வந்த வேன் மோதியதில் பலத்த காயமடைந்தாா்.
அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருச்சி மாவட்டம், குளித்தலை வைகை நல்லூா் பகுதியைச் சோ்ந்த வேன் ஓட்டுநா் குமரேசன் மீது கொட்டாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.