Los Angeles Riots: பத்திரிகையாளர் தலையில் ரப்பர்க் குண்டால் சுட்ட அமெரிக்க போலீஸ...
மருத்துவமனையில் குழந்தை உயிரிழப்பு
மதுரையில் தனியாா் மருத்துவமனையில் குழந்தை உயிரிழந்தது தொடா்பாக செக்கானூரணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மதுரை மாவட்டம், செக்கானூரணி அருகே உள்ள பூவரசம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த நல்லசுதன், சிவகாமசுந்தரி தம்பதியின் ஒன்றரை வயது குழந்தை அஷ்வந்த்.
இந்தக் குழந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், திங்கள்கிழமை திடீரென குழந்தை உயிரிழந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், செக்கானூரணி போலீஸாா் வழக்குப் பதிந்து, குழந்தை எவ்வாறு இறந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.