`கூட்டணி குறித்து நானே முடிவு செய்வேன்' - ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பின் முக்கி...
தீக்குளித்த ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு
மதுரை மாவட்டம், மேலூா் அருகே தீக்குளித்ததில் பலத்த காயமைடந்த ஆட்டோ ஓட்டுநா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
மேலூா் அருகேயுள்ள நாவினிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சேவுகன் மகன் கண்ணன் (43). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கும், இவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் கண்ணன் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். இதில், பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், மேலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.