செய்திகள் :

ஆர்சிபி அணியை வாங்க நான் என்ன பைத்தியக்காரனா? டி.கே.சிவக்குமார் ஆவேசம்!

post image

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் “நான் ஏன் ஆர்சிபி அணியை வாங்கப் போகிறேன். நான் என்ன பைத்தியக்காரனா?” எனக் கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடங்கிய 18 ஆண்டுகளில் ஆர்சிபி இந்தாண்டு முதல்முறையாக கோப்பையை வென்றது. இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.

இந்த உயிரிழப்பு விவகாரத்தில் ஆர்சிபி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் பொருளாளர், செயளாலர் ராஜிநாமா செய்தார்.

விராட் கோலி மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து ஆர்சிபி அணியை விற்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. இதனை கர்நாடகத்தின் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் வாங்குவதாக தகவல் வெளியாகியது. இது குறித்து அவர் பேசியதாவது:

நான் என்ன பைத்தியக்காரனா?

நான் பைத்தியக்காரன் இல்லை. எனது இள வயதில் இருந்தே நான் கார்நாடக கிரிக்கெட் சங்கத்தின் உறுப்பினராக இருந்துள்ளேன். அப்போதே இருந்தே எனக்கு அதில் பங்குபெற அழைப்பு விடுக்கப்பட்டாலும் எனக்கு நேரம் இருந்ததில்லை.

எனது கல்வி நிறுவனத்தைக் கூட பார்த்துக்கொள்ள நேரமில்லாமல் எனது குடும்பத்தினருக்கு மாற்றிவிட்டு நான் ராஜிநாமா செய்துவிட்டேன்.

எனக்கு ஏன் ஆர்சிபி தேவைப்படுகிறது? நான் ராயல் சேலஞ்சஸ் மதுவைக் கூட குடித்ததில்லை என்றார்.

ஆர்சிபி அணியின் மதிப்பு சுமார் 1 பில்லியன் டாலர் (ரூ. 8,600 கோடி) இருக்குமென தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்தில் இருந்து திடீரென இந்தியாவுக்குத் திரும்பிய கௌதம் கம்பீர்! என்ன காரணம்?

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் இந்தியாவுக்கு திரும்பினார். இந்திய அணிக்கும் இந்தியா ஏ அணிக்கும் நடைபெறவிருந்த பயிற்சி ஆட்டத்திற்கான சில மணி நேரம் முன்பாகவே கௌதம் கம்பீர் இந்தியாவுக்... மேலும் பார்க்க

ஒரே போட்டியில் பல சாதனைகளை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் பாட் கம்மின்ஸ் தனது 14-ஆவது முறையாக 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். இத்துடன் குறைந்த பந்துகளில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி... மேலும் பார்க்க

டபிள்யூடபிள்யூஇ ஆக மாறிய கிரிக்கெட் போட்டி: மோதிக்கொண்ட ஆஸி. - தெ.ஆ. வீரர்கள்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நடந்த மோதல்களை ஐசிசி டபிள்யூடபிள்யூஇ உடன் ஒப்பிட்டு விடியோவாக வெளியிட்டுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டனில் ஜூன்.11 முதல் நடைபெற்று வருக... மேலும் பார்க்க

19 சிக்ஸர்கள் அடித்து உலக சாதனை படைத்த ஃபின் ஆலன்!

நியூசிலாந்து வீரர் ஃபின் ஆலன் டி20 கிரிக்கெட்டில் 19 சிக்ஸர்கள் அடித்து வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். அமெரிக்காவில் நடைபெறும் எம்எல்சி (மேஜர் லீக் கிரிக்கெட்) டி20 தொடரில் சான்பிரான்சிஸ்கோ யுன... மேலும் பார்க்க

கம்மின்ஸ் 6 விக்கெட்டுகள்: 138 ரன்களுக்கு சுருண்ட தென்னாப்பிரிக்கா!

ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ் அசத்தல் பந்துவீச்சால் தெ.ஆ. அணி 138 ரன்களுக்கு சுருண்டது.லண்டனில் நடைபெற்றுவரும் டபிள்யூடிசி இறுதிப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸி. 121க்கு ஆல் அவுட் ஆக, முதல் நாள் முடி... மேலும் பார்க்க

பிஜிடி தொடரின் தோல்விக்குப் பின் கோலியை கேப்டனாக்கி இருப்பேன்: ரவி சாஸ்திரி

விராட் கோலியின் ஓய்வு சரியாக கையாளப்பட்டிருக்க வேண்டுமென ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.ஆஸ்திரேலியாவுடனான பிஜிடி தொடரின் தோல்விக்குப் பிறகு விராட் கோலி தனது ஓய்வை அறிவித்தார். அதாவது, கடந்த மாதம் ஐபிஎல் போ... மேலும் பார்க்க