செய்திகள் :

பிஜிடி தொடரின் தோல்விக்குப் பின் கோலியை கேப்டனாக்கி இருப்பேன்: ரவி சாஸ்திரி

post image

விராட் கோலியின் ஓய்வு சரியாக கையாளப்பட்டிருக்க வேண்டுமென ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுடனான பிஜிடி தொடரின் தோல்விக்குப் பிறகு விராட் கோலி தனது ஓய்வை அறிவித்தார். அதாவது, கடந்த மாதம் ஐபிஎல் போட்டியின்போது இதனை அறிவித்தார்.

இங்கிலாந்துடன் நடைபெறும் டெஸ்ட் தொடருக்காக அணித் தேர்வு நடைபெற்று வந்தது. இதில் விராட் கோலி, ரோஹித் நீக்கப்படுவாரென தகவல்கள் வெளியான நிலையில் இருவருமே தங்களது ஓய்வை அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்கள்.

விராட் கோலி டெஸ்ட்டில் 123 போட்டிகளில் 9,230 ரன்கள் குவித்துள்ளார். அதில் 30 சதங்கள் அடங்கும். இங்கிலாந்து தொடர் வரும் ஜூன் 20ஆம் தேதி தொடங்குகிறது.

இது குறித்து ரவி சாஸ்திரி கூறியதாவது:

ஓய்வுக்கு முன் கோலியை கேப்டனாக்கி இருப்பேன்

விராட் கோலி போனபிறகுதான் மக்கள் அவர் எவ்வளவு பெரிய வீரர் என்பதைப் புரிந்து கொள்வார்கள். அவர் ஓய்வு பெற்றதும் ஓய்வு பெற்ற விதமும் விதமும் வருத்தமளிக்கிறது.

இதை விடவும் நல்ல முறையில் அவரை ஓய்வு பெற வைத்திருக்கலாம். கூடுதலாக இது குறித்து அவரிடம் பேசியிருக்கலாம்.

என்னால் எதாவது செய்ய முடிந்திருந்தால், பிஜிடி தொடரின் தோல்விக்குப் பின் நான் கோலியை கேப்டனாக்கி இருப்பேன் என்றார்.

தற்போது, டெஸ்ட் கேப்டனாக ஷுப்மன் கில் தேர்வாகியுள்ளார். விராட் கோலி 2027 ஒருநாள் உலகக் கோப்பை வரை விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து டெஸ்ட் தொடரை நினைத்து பதற்றமாக உள்ளது: இந்திய அணியின் பயிற்சியாளர்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை நினைத்து சிறிது பதற்றமாக இருப்பதாக இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் தெரிவித்துள்ளார்.இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற... மேலும் பார்க்க

இங்கிலாந்தில் இருந்து திடீரென இந்தியாவுக்குத் திரும்பிய கௌதம் கம்பீர்! என்ன காரணம்?

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் இந்தியாவுக்கு திரும்பினார். இந்திய அணிக்கும் இந்தியா ஏ அணிக்கும் நடைபெறவிருந்த பயிற்சி ஆட்டத்திற்கான சில மணி நேரம் முன்பாகவே கௌதம் கம்பீர் இந்தியாவுக்... மேலும் பார்க்க

ஒரே போட்டியில் பல சாதனைகளை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் பாட் கம்மின்ஸ் தனது 14-ஆவது முறையாக 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். இத்துடன் குறைந்த பந்துகளில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி... மேலும் பார்க்க

டபிள்யூடபிள்யூஇ ஆக மாறிய கிரிக்கெட் போட்டி: மோதிக்கொண்ட ஆஸி. - தெ.ஆ. வீரர்கள்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நடந்த மோதல்களை ஐசிசி டபிள்யூடபிள்யூஇ உடன் ஒப்பிட்டு விடியோவாக வெளியிட்டுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டனில் ஜூன்.11 முதல் நடைபெற்று வருக... மேலும் பார்க்க

19 சிக்ஸர்கள் அடித்து உலக சாதனை படைத்த ஃபின் ஆலன்!

நியூசிலாந்து வீரர் ஃபின் ஆலன் டி20 கிரிக்கெட்டில் 19 சிக்ஸர்கள் அடித்து வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். அமெரிக்காவில் நடைபெறும் எம்எல்சி (மேஜர் லீக் கிரிக்கெட்) டி20 தொடரில் சான்பிரான்சிஸ்கோ யுன... மேலும் பார்க்க

கம்மின்ஸ் 6 விக்கெட்டுகள்: 138 ரன்களுக்கு சுருண்ட தென்னாப்பிரிக்கா!

ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ் அசத்தல் பந்துவீச்சால் தெ.ஆ. அணி 138 ரன்களுக்கு சுருண்டது.லண்டனில் நடைபெற்றுவரும் டபிள்யூடிசி இறுதிப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸி. 121க்கு ஆல் அவுட் ஆக, முதல் நாள் முடி... மேலும் பார்க்க