Ahmedabad Airplane Accident: விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானம்; 242 பயணிகளின் நிலை என்ன?
குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கிறது.

குஜராத்தின் தலைநகரான அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து மதியம் 1:17 மணியளவில் புறப்பட்ட AI 171 - 787 என்ற எண் கொண்ட லண்டணுக்குச் செல்லும் ஏர் இந்தியா விமானம் சில நொடிகளிலேயே திடீரென விபத்துக்குள்ளாகியிருக்கிறது.
விபத்தில் சிக்கிய விமானத்தில் 242 பயணிகள் இருந்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. விபத்துக்குள்ளான இடத்தில் வானுயர கரும்புகை சூழ்ந்திருக்கும் நிலையில் மீட்பு நடவடிக்கைகள் தொடங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
242 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 ரக விமானம் விமான நிலையத்துக்கு அருகிலுள்ள மெஹானி என்கிற குடியிருப்புப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளாகியிருக்கிறது.
இது சம்பந்தமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குஜராத்தின் முதலமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சருடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.