செய்திகள் :

என்ன, இதையெல்லாம் காலை உணவாக சாப்பிடவே கூடாதா?

post image

வழக்கமாக, காலை உணவுதான் மிகவும் முக்கியம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறி வரும் அதே வேளையில், அதைத்தான் பெரும்பாலுமான மக்கள் தவிர்ப்பது அல்லது சமரசம் செய்துகொள்வது என்று போகிறது.

இரவு உணவுக்குப் பிறகு மிக நீண்ட இடைவெளி விட்டு எடுத்துக் கொள்ளும் காலை உணவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள், அன்றைய நாள் முழுமைக்குமான ஒரு ஓட்டத்துக்குத் தேவையான சத்தான உணவாக காலை உணவு அமைய வேண்டும் என்று பலரும் கூக்குரலிட்டாலும், காலையில் சாப்பிட முடிவதேயில்லை.. வெறும் டீ அல்லது காபிதான் என்று சொல்பவர்களும் ஏராளம்.

சிலரோ இதுதான் மிகச் சிறந்த காலை உணவு என்று நினைத்துக் கொண்டு கண்டதையும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மையிலேயே, பலரும் இதுதான் காலை உணவு என்று சொல்லி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் 6 உணவுகளைத்தான் சாப்பிடவே கூடாது என்று மருத்தவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

காபி அல்லது தேநீருடன் பிஸ்கட்

காபி

பலருடைய வீடுகளில் இதுதான் காலை உணவு அல்லது கண் விழித்ததும் வயிற்றுக்குள் போடும் உணவாக உள்ளது. ஆனால் இதுதான் உடலுக்கு மிகவும் தீங்கானது என்கிறார்கள். இதில் எந்த சத்தும் இல்லை. வெறும் கார்போஹைட்ரேட் மட்டும்தான் இருக்கிறது. தொடர்ந்து பசியோடும், வெறும் சர்க்கரை அளவை அதிகரிக்கவும் மட்டும் உதவும்.

தேநீர் அல்லது காபி சாப்பிட்ட பிறகு சத்தான காலை உணவை கட்டாயம் சாப்பிட வேண்டும், பிஸ்கட் பதிலாக உலர்ந்த பருப்பு வகைகள் அல்லது முட்டை சாப்பிடலாம்.

பிரட் ரோஸ் - பழச்சாறு

ரொட்டி

இதைப் பற்றி ஒன்றுமே சொல்ல முடியாது. மிகச் சிறந்த உணவு என்றுதானே நினைக்கிறோம். இல்லை. இது முழுக்க முழுக்க சர்க்கரை அண்டான் என்றுதான் சொல்ல வேண்டும். புரதமோ நார்ச்சத்தோ இல்லை. இன்சுலின்தான் அதிகரிக்கும். இதற்குப் பதிலாக முழுமையான பழத்தை சாப்பிடலாம். வெறும் ரொட்டிக்குப் பதிலாக முட்டை சாப்பிடலாம். நாள் முழுமைக்கும் சக்தி தரும்.

பாலுடன் கார்ன்ஃபிளாக்ஸ்

பாலுடன் உணவு

கடையில் விற்கப்படும் செரல்ஸ் அல்லது கார்ன் பிளாக்ஸ் போன்றவற்றை பாலில் ஊறவைத்து சாப்பிடுவது சத்தானது என்று நினைத்திருந்தால் தவறு. அது முழுக்க முழுகக் சர்க்கரை நிறைந்தது. கெட்டுப்போகாமல் இருக்க பிராசசிங் செய்யப்பட்டிருக்கும். இதற்குப் பதில் வீடுகளில் தயாரிக்கப்படும் சத்து மாவு உருண்டை அல்லது கஞ்சியைப் பயன்படுத்தலாம்.

சான்ட்விச்

சான்ட்விச்

ரொட்டியில் காய்கறிகளை வைத்து சாப்பிட்டால் அது மிகச் சிறந்த உணவு என்றுதான் நினைக்கிறோம். இல்லை என்கிறது உண்மை நிலவரம். மைதா போன்றவற்றால் தயாரிக்கப்படும் ரொட்டியுடன் கெட்டுப்போகாமல் இருக்க அதிகப்படியான பிராசசிங் நிரப்பப்பட்ட சாஸ்களை இணைத்து செய்யும் சான்ட்விச் எப்போதும் கெடுதல்தான். அதில் ஒரு சில இலை தழைகளை வைத்துவிட்டால் அதனை சத்தானதாக மாற்றிவிட முடியாது. ரத்தத்தில் சர்க்கரை அளவுதான் அதிகரிக்கும்.

ஒருவேளை தானிய ரொட்டி அல்லது சிறுதானிய ரொட்டியில் எந்த டப்பாவில் அடைக்கப்பட்ட சாஸ்களையும் சேர்க்காமல் முட்டை, காய்கறிகள் அல்லது பன்னீர் சேர்த்து சாப்பிடலாம்.

ஃபகத் ஃபாசில் - எஸ்.ஜே.சூர்யா படம் கைவிடப்பட காரணம் என்ன? விபின் தாஸ் பதில்!

மலையாள இயக்குநர் விபின் தாஸ் ஃபகத் ஃபாசில் - எஸ்.ஜே.சூர்யா படம் கைவிடப்பட்டது எனக் கூறியுள்ளார். ஜெய ஜெய ஜெய ஜெய ஹே படத்தின் மூலம் விபின் தாஸ் பிரபல இயக்குநராக மாறியிருக்கிறார். இவரது இயக்கத்தில் மோகன... மேலும் பார்க்க

லோகேஷ் கனகராஜ் படங்களின் வெற்றி ரகசியம் பகிர்ந்த நாகார்ஜுனா!

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படங்களின் வெற்றிக்குக் காரணம் அவரது தனித்துவமான கதாபாத்திரங்கள்தான் எனக் கூறியுள்ளார். நாகார்ஜுனா தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள கூலி படத்தில் ந... மேலும் பார்க்க

யுடிடி: அரையிறுதியில் டெல்லி ஜெய்ப்பூா், மும்பை-கோவா மோதல்

இந்தியன் ஆயில் யுடிடி சீசன் 6 அரையிறுதி ஆட்டங்களில் தபாங் டெல்லி-ஜெய்ப்பூா் பேட்ரியட்ஸ் அணிகளும், யு மும்பா-டெம்போ கோவா சேலஞ்சா்ஸ் அணிகளும் மோதுகின்றன. அகமதாபாதில் வியாழக்கிழமை நடைபெற்ற கடைசி லீக் ஆட... மேலும் பார்க்க

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.நடிகர் சந்தானத்தின் டிடி ரிட்டன்ஸின் அடுத்த பாகமான டிடி நெக்ஸ்ட் லெவல் (DD next level) படம் நாளை(ஜூன் 13) ஜீ தமிழ் ஓட... மேலும் பார்க்க

ஆமதாபாத் விமான விபத்து - புகைப்படங்கள்

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் காயமடைந்த ஒருவரை சிகிச்சைக்காக அழைத்துச் செல்லும் சிஆர்பிஎஃப் படையினர்.விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் 2 பைலட் உள்பட, 10 விமான ஊழியர்கள் மற்றும் 230 ப... மேலும் பார்க்க

சூர்யா- 45 டீசர் அப்டேட்!

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகும் அவரது 45-வது படத்தின் டீசர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யாவின் 45-வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். நீதிமன்ற வழக்கை மையமாக வைத்து படத்தின் க... மேலும் பார்க்க