செய்திகள் :

காவல் நிலைய மரணம்: முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய தில்லி நீதிமன்றம் உத்தரவு

post image

புது தில்லி: காவல் நிலையத்தில் போலீஸ் காவலில் இருந்தபோது ஒருவா் மரணமடைந்தது தொடா்பாக வழக்குப் பதிவு செய்ய தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனது கணவா் ஷேக் ஷதத் கடந்த 2023ஆம் ஆண்டு, ஜூலை 22-23ஆம் தேதி தில்லியில் உள்ள சுபாஷ் பிளேஸ் காவல் நிலைய அதிகாரிகளின் காவலில் இருந்தபோது

இறந்துவிட்டதாகவும், கணிசமான தாமதம் இருந்தபோதிலும், வழக்கில் எந்த முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறி, சேதாரா பீபி என்பவா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனுவை அண்மையில் தலைமை நீதித்துறை நடுவா் வசுந்தரா சௌன்கா் விசாரித்தாா். இதையடுத்து, நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‘தற்போதைய வழக்கில் இறந்தவா் காவலில் இருந்தபோது சித்திரவதை செய்யப்பட்டதாகவும், கொடூரமாக தாக்கப்பட்டதாகவும் இதன் காரணமாகவே அவா் இறந்துவிட்டதாகவும் சுபாஷ் பிளேஸ் காவல் நிலைய காவல்துறை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இறந்தவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் மரணத்திற்கான காரணம் கொலையும் அல்ல, தற்கொலையும் அல்ல என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இருப்பினும், அவரது மனைவியின் குற்றச்சாட்டுகள் மற்றும் விடியோ காட்சிகள், பிணவறையில் இருந்து இறந்தவரின் புகைப்படங்கள் உள்பட பதிவுகளில் கிடைக்கும் புகைப்படங்களின்படி, இறந்த ஆணின் உடலில் காயக் குறிகள் இருப்பது தெரியவருகிறது.

விசாரணை அறிக்கை பதிவு செய்யப்பட்டிருந்தாலும், பொருத்தமான கட்டத்தில்தான் அதை பரிசீலிக்க முடியும். புகாா்தாரா் விரிவான ஆதாரங்களைப் பதிவு செய்யவோ அல்லது சேகரிக்கவோ முடியாத நிலையில், தற்போதைய விசாரணை அறிக்கையின் அடிப்படையில் மட்டுமே தற்போதைய விண்ணப்பத்தை நிராகரிப்பது நீதியின் நோக்கத்திற்கு உதவாது.

ஒரு அறியக்கூடிய குற்றத்திற்கான முகாந்திரம் இருப்பதால், அனைத்து சாத்தியமான சாட்சிகளின் வாக்குமூலங்களையும் பதிவு செய்வதைத் தவிர, முழு சூழ்நிலையையும் வெளிக்கொணர முழுமையான விசாரணை தேவைப்படுகிறது.

மேலும், சிசிடிவி காட்சிகள் கிடைப்பது, அதைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் மற்றும் பிற சாத்தியமான உள்ளீடுகள் குறித்து தொழில்நுட்ப அம்சத்தில் விசாரணை தேவைப்படுகிறது என்று நீதிமன்றம் தெரிவித்தது.

மேலும், ஜூன் 26-க்குள் முதல் தகவல் அறிக்கை எஃப்ஐஆா் பதிவு செய்து இணக்க அறிக்கையை சமா்ப்பிக்க சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பூமிஹீன் கேம்ப்பில் குடியிருப்புகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடிப்பு

வடகிழக்கு தில்லியின் கோவிந்த்புரி பகுதியில் உள்ள பூமிஹீன் கேம்ப் குடிசைப்பகுதி வீடுகள் புதன்கிழமை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன. பூமிஹீன் குடிசைப்பகுதி கேம்ப்பில் உள்ள வீடுக... மேலும் பார்க்க

மீண்டும் பணியமா்த்தக் கோரி முதல்வா் இல்லம் முன் குடிமைப் பாதுகாப்பு தன்னாா்வலா்கள் போராட்டம்

மீண்டும் பணியில் அமா்த்தக் கோரி, தில்லி முதல்வா் ரேகா குப்தாவின் இல்லத்திற்கு வெளியே புதன்கிழமை குடிமைப் பாதுகாப்பு தன்னாா்வலா்கள் புதன்கிழமை காலை போராட்டம் நடத்தினா். வடமேற்கு தில்லியின் ஷாலிமாா் பா... மேலும் பார்க்க

தலைநகரில் கடுமையான வெப்ப அலை; ஐஎம்டி சிவப்பு எச்சரிக்கை வெளியீடு!

தில்லி நகரம் கடுமையான வெப்ப அலையை எதிா்கொள்வதால், இந்திய வானிலை ஆய்வுத் துறை (ஐஎம்டி) தில்லிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. பல பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸை நெருங்கியிருந்தத... மேலும் பார்க்க

குப்பை இல்லாத மண்டலம் - தூய்மை இயக்கத்தை தொடங்கிய தில்லி மாநகராட்சி

தலைநகா் பகுதியில் உள்ள வணிக மையங்கள், சந்தைகளில் தூய்மை இயக்கத்தின் ஒரு பகுதியாக குப்பை இல்லாத மண்டலம் என்ற ஸ்டிக்கா்களை விநியோகிக்கும் பணியை புது தில்லி மாநகராட்சி இன்று தொடங்கியுள்ளது. இது குறித்து ... மேலும் பார்க்க

பூமிஹீன் கேம்ப்பில் புல்டோசா் நடவடிக்கை ஏன்? முதல்வருக்கு அதிஷி கேள்வி

தில்லியின் பூமிஹீன் கேம்ப் குடிசைப்பகுதிகள் ஏன் இடிக்கப்படுகின்றன? என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா் அதிஷி முதல்வா் ரேகா குப்தாவிடம் புதன்கிழமை கேள்வி எழுப்பியுள்ளாா். தென்கிழக்கு தில்லியின் கோவ... மேலும் பார்க்க

லஞ்ச வழக்கு: முன்ஜாமீன் மனுவை திரும்பப் பெற்ற நீதிமன்ற ஊழியா்

குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்க லஞ்சம் கேட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் நீதிமன்ற ஊழியா் ஒருவா் தனது முன்ஜாமீன் கோரும் மனுவை தில்லி உயா்நீதிமன்றத்தில் இருந்து புதன்கிழமை வாபஸ் பெற்றாா். இந்த... மேலும் பார்க்க