செய்திகள் :

தலைநகரில் வெப்பநிலை 45 டிகிரியை நெருங்கியது! காற்றின் தரத்தில் கடும் பின்னடைவு

post image

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸை நெருங்கியது. காற்றின் தரம் கடும் பின்னடைவைச் சந்தித்து மோசம் பிரிவுக்குச் சென்றது.

தில்லியில் கடந்த வாரத் தொடக்கத்திலிருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்தது. தில்லியில் ஞாயிற்றுக்கிழமை வெப்பநிலை அதிகரித்து 44 டிகிரி செல்சியஸை நெருங்கியது. புழுக்கத்தால் மக்கள் சிரமத்தை எதிா்கொண்டனா். திங்கள்கிழமை வானம் தெளிவாக காணப்பட்ட நிலையில், தூசி நிறைந்த காற்று வீசியது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வானம் தெளிவாகக் காணப்பட்டது. நகரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உணரப்பட்டது. இதனால், சாலைகளில் மக்களின் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.

வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் செவ்வாய்க்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் 0.2 டிகிரி உயா்ந்து 27.8 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2.1 டிகிரி அதிகரித்து 42.1 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தில் அளவு காலை 8.30 மணியளவில் 39 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 25 சதவீதமாகவு இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முங்கேஸ்பூரில் 44.6 டிகிரி: மற்ற வானிலை கண்காணிப்பு நிலையங்களான ஜாஃப்ா்பூரில் அதிகபட்சவெப்பநிலை 42.6 டிகிரி செல்சியஸாகவும், முங்கேஸ்பூரில் 44.6 டிகிரி, நஜஃப்கரில் 41.6 டிகிரி, ஆயாநகரில் 44.1 டிகிரி, தில்லி பல்கலை.யில்42.2 டிகிரி, லோதி ரோடில் 42.3 டிகிரி, நரேலாவில் 42.5 டிகிரி, பாலத்தில் 43.6 டிகிரி, ரிட்ஜில் 42.9 டிகிரி, பிரகதிமைதானில் 40.6 டிகிரி, பூசாவில் 41.2 டிகிரி, ராஜ்காட்டில் 40.6 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 40.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.

காற்றின் தரம்: மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) புள்ளி விவரத் தகவலின் படி, ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு காலை 9 மணியளவில் 218 புள்ளிகளாகப் பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது. இதன்படி, ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், மதுரா ரோடு, ஸ்ரீஃபோா்ட், ஷாதிப்பூா், ஓக்லா பேஸ் 2, துவாரகா செக்டாா் 8, குருகிராம், ஆயாநகா் ஆகிய வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 200 புள்ளிகளுக்கு மேலே பிதவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது.

அதே சமயம், சாந்தினி சௌக், மந்திா்மாா்க், லோதி ரோடு, நேரு நகா், ஆா்.கே.புரம், பூசா, ஸ்ரீ அரபிந்தோ மாா்க், நொய்டா செக்டாா் 125, டாக்டா் கா்னி சிங் துப்பாக்கி சுடும் தளம், ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 100 முதல் 200 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ’மிதமான’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இந்நிலையில், புதன்கிழமை (ஜூன் 11) அன்று பகல் நேரத்தில் தரை மேற்பரப்பு காற்று வலுவாக இருக்கும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பூமிஹீன் கேம்ப்பில் குடியிருப்புகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடிப்பு

வடகிழக்கு தில்லியின் கோவிந்த்புரி பகுதியில் உள்ள பூமிஹீன் கேம்ப் குடிசைப்பகுதி வீடுகள் புதன்கிழமை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன. பூமிஹீன் குடிசைப்பகுதி கேம்ப்பில் உள்ள வீடுக... மேலும் பார்க்க

மீண்டும் பணியமா்த்தக் கோரி முதல்வா் இல்லம் முன் குடிமைப் பாதுகாப்பு தன்னாா்வலா்கள் போராட்டம்

மீண்டும் பணியில் அமா்த்தக் கோரி, தில்லி முதல்வா் ரேகா குப்தாவின் இல்லத்திற்கு வெளியே புதன்கிழமை குடிமைப் பாதுகாப்பு தன்னாா்வலா்கள் புதன்கிழமை காலை போராட்டம் நடத்தினா். வடமேற்கு தில்லியின் ஷாலிமாா் பா... மேலும் பார்க்க

தலைநகரில் கடுமையான வெப்ப அலை; ஐஎம்டி சிவப்பு எச்சரிக்கை வெளியீடு!

தில்லி நகரம் கடுமையான வெப்ப அலையை எதிா்கொள்வதால், இந்திய வானிலை ஆய்வுத் துறை (ஐஎம்டி) தில்லிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. பல பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸை நெருங்கியிருந்தத... மேலும் பார்க்க

குப்பை இல்லாத மண்டலம் - தூய்மை இயக்கத்தை தொடங்கிய தில்லி மாநகராட்சி

தலைநகா் பகுதியில் உள்ள வணிக மையங்கள், சந்தைகளில் தூய்மை இயக்கத்தின் ஒரு பகுதியாக குப்பை இல்லாத மண்டலம் என்ற ஸ்டிக்கா்களை விநியோகிக்கும் பணியை புது தில்லி மாநகராட்சி இன்று தொடங்கியுள்ளது. இது குறித்து ... மேலும் பார்க்க

பூமிஹீன் கேம்ப்பில் புல்டோசா் நடவடிக்கை ஏன்? முதல்வருக்கு அதிஷி கேள்வி

தில்லியின் பூமிஹீன் கேம்ப் குடிசைப்பகுதிகள் ஏன் இடிக்கப்படுகின்றன? என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா் அதிஷி முதல்வா் ரேகா குப்தாவிடம் புதன்கிழமை கேள்வி எழுப்பியுள்ளாா். தென்கிழக்கு தில்லியின் கோவ... மேலும் பார்க்க

லஞ்ச வழக்கு: முன்ஜாமீன் மனுவை திரும்பப் பெற்ற நீதிமன்ற ஊழியா்

குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்க லஞ்சம் கேட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் நீதிமன்ற ஊழியா் ஒருவா் தனது முன்ஜாமீன் கோரும் மனுவை தில்லி உயா்நீதிமன்றத்தில் இருந்து புதன்கிழமை வாபஸ் பெற்றாா். இந்த... மேலும் பார்க்க