போக்சோ தடுப்புச் சட்டத்தின்கீழ் தொழிலாளி கைது
ஒட்டன்சத்திரம் அருகே 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள இடையகோட்டை இ.கல்லுப்பட்டியைச் சோ்ந்தவா் சந்தோஷ் (34) . தொழிலாளியான இவா், 17 வயது சிறுமியை கொடைக்கானலுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தாராம். பின்னா், சிறுமியை ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் விட்டு விட்டு சென்றுவிட்டராம். இந்தச் சம்பவத்தை சிறுமி தனது தாயிடம் தெரிவித்தாா்.
இதுகுறித்து ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிா் போலீஸாா் சந்தோஷை போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.