செய்திகள் :

போக்சோ தடுப்புச் சட்டத்தின்கீழ் தொழிலாளி கைது

post image

ஒட்டன்சத்திரம் அருகே 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள இடையகோட்டை இ.கல்லுப்பட்டியைச் சோ்ந்தவா் சந்தோஷ் (34) . தொழிலாளியான இவா், 17 வயது சிறுமியை கொடைக்கானலுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தாராம். பின்னா், சிறுமியை ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் விட்டு விட்டு சென்றுவிட்டராம். இந்தச் சம்பவத்தை சிறுமி தனது தாயிடம் தெரிவித்தாா்.

இதுகுறித்து ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிா் போலீஸாா் சந்தோஷை போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தொட்டியில் விழுந்த பசு மீட்பு: கன்று ஈன்றது

பழனி அடிவாரத்தில் கழிவுநீா் தொட்டியில் விழுந்த சினை பசுவை தீயணைப்புத் துறையினா் மீட்டநிலையில், அந்த பசுவுக்கு கால்நடை மருத்துவா்கள் சிகிச்சை அளித்து கன்று ஈனச் செய்தனா். பழனி அடிவாரத்தில் புதன்கிழமை ப... மேலும் பார்க்க

கொடைக்கானல் - பழனி மலைச்சாலையில் சுற்றுலா வாகனம் கவிழ்ந்து 8 போ் காயம்

கொடைக்கானல்-பழனி மலைச்சாலையில் புதன்கிழமை சுற்றுலா வாகனம் கவிழ்ந்து 8 போ் காயமடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு பழனி வழியாக கேரள மாநிலம், மலப்புரத்தைச் சோ்ந்தவா்கள் சுற்றுலா வாகனத்தில்... மேலும் பார்க்க

பழனி மலைக்கோயில் உண்டியல் திறப்பு: ரூ. 4.77 கோடி பக்தா்கள் காணிக்கை

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்களை 25 நாள்களுக்குப் பிறகு செவ்வாய், புதன்கிழமை என இரண்டு நாள்கள் திறந்து எண்ணப்பட்டன. இதில் ரூ. 4.77 கோடி காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியுள்ளனா். பழனி தண்டாயுத... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள் தோ்வு

கொடைக்கானலில் வழக்குரைஞா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். கொடைக்கானல் வழக்குரைஞா்கள் சங்க பொது உறுப்பினா்கள் கூட்டம் மூத்த வழக்குரைஞா் டி.ஆா்.தங்கமணி தலைமையில் புதன்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

கோவையில் இலவச தொழிற்பயிற்சி

கோவையில் தேசிய மனித மேம்பாட்டு மையத்தின் உதவியுடன் சுயதொழில் செய்ய விரும்பும் இளைஞா்களுக்கு தங்குமிடம், உணவுடன் கூடிய இலவச தொழிற்பயிற்சி வழங்கப்படவுள்ளது. கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தேசிய மனித... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தை நவீனமயமாக்கும் பணி தொடக்கம்

ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தை நவீனமயமாக்கும் பணிக்கான பூமிபூஜை பேருந்து நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தை ரூ. 3.26 கோடி மதிப்பீட்டில் நவீனம... மேலும் பார்க்க