செய்திகள் :

Ashwin : 'துண்டை வைத்து பந்தை சேதப்படுத்தினாரா அஷ்வின்?' - TNCA வெளியிட்ட முக்கிய தகவல்!

post image

'அஷ்வின் மற்றும் திண்டுக்கல் அணி மீது புகார்!'

தமிழ்நாடு ப்ரீமியர் லீக் தொடரில் மதுரை அணிக்கு எதிரான போட்டியில் திண்டுக்கல் அணியின் கேப்டனான அஷ்வின் மற்றும் அந்த அணியின் வீரர்கள் பந்தை வேண்டுமென்றே சேதப்படுத்தியதாக புகார் எழுந்திருந்தது. மதுரை அணி நிர்வாகம் கொடுத்திருக்கும் இந்தப் புகார் குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் அதிகாரப்பூர்வ விளக்கத்தை கொடுத்திருக்கிறது.

அஷ்வின்
அஷ்வின்

தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 'கடந்த 14 ஆம் தேதி நடந்த மதுரை மற்றும் திண்டுக்கல் அணிகளுக்கிடையேயான போட்டி சம்பந்தமாக மதுரை அணி சார்பில் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷனிடம் ஒரு புகார் அளிக்கப்பட்டது. 15 ஆம் தேதி இரவு 10:51 மணியளவில் எங்களுக்கு இந்த புகார் கிடைக்கப்பெற்றது. திண்டுக்கல் வீரர்கள் பந்தை சேதப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரை நாங்கள் தீர்க்கமாக ஆய்வு செய்திருக்கிறோம். அதனடிப்படையில் சில விளக்கங்களை அளிக்க விரும்புகிறோம்.

'TNCA விளக்கம்!'

1. பந்து சேதப்படுத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. துண்டை வைத்து பந்தை சேதப்படுத்தியதாகத்தான் புகார் எழுப்பப்பட்டிருக்கிறது. அந்தத் துண்டு TNCA சார்பில்தான் இரு அணி வீரர்களுக்கும் வழங்கப்பட்டது. மேலும், அந்த பந்து போட்டி முழுவதுமே நடுவர்களின் கண்காணிப்பில்தான் இருந்தது. போட்டியின் போது யாராலும் எந்த புகாரும் அளிக்கப்படவில்லை. அந்தப் புகார் முழுக்க முழுக்க யூகத்தின் அடிப்படையிலானதாக மட்டுமே இருக்கிறது.

Ashwin
Ashwin

2. 17 ஆம் தேதி மதியம் 3 மணிக்குள் மதுரை அணி நிர்வாகம் உரிய வீடியோ, புகைப்பட ஆதாரங்களுடன் TNCA வை அணுகினால் விசாரணைக்குழு அமைக்க உத்தரவிடுவோம்.

3. அடிப்படை ஆதாரம் இல்லாமல் அவதூறு பரப்பும் வகையிலான புகார்களை எழுப்பினால் TNCA வின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர்.

Ashwin
Ashwin

தொடரின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதில் TNCA உறுதியாக இருக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் போட்டியின் அறத்தை காக்கும் வகையில் நடந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.' எனக் கூறியிருக்கிறது.

அஷ்வின் மற்றும் திண்டுக்கல் வீரர்கள் இரசாயனம் தெளிக்கப்பட்ட துண்டை பயன்படுத்தி பந்தை சேதப்படுத்தியதாக மதுரை அணி புகார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் WTC இறுதிப்போட்டி இல்லை; BCCI கோரிக்கையை ICC நிராகரித்தது ஏன்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) விண்ணப்பத்தை, ஐ.சி.சி நிராகரித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.டெஸ்ட் சாம்பி... மேலும் பார்க்க

Markram : 'பவுமாவை தென்னாப்பிரிக்க மக்கள் மறக்கமாட்டார்கள்!' - எய்டன் மார்க்ரம் மகிழ்ச்சி!

'மார்க்ரம் நெகிழ்ச்சி!'ஆஸ்திரேலிய அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றிருக்கிறது. தென்னாப்பிரிக்கா நீண்ட காலமாக காத்திருந்து ஒரு பெரிய வெ... மேலும் பார்க்க

Bavuma : 'எங்களை விமர்சித்தவர்களுக்கு இந்த வெற்றி சமர்ப்பணம்!' - தென்னாப்பிரிக்க கேப்டன் பவுமா!

ஆஸ்திரேலிய அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றிருக்கிறது. தென்னாப்பிரிக்க நீண்ட காலமாக காத்திருந்து ஒரு பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. ... மேலும் பார்க்க

South Africa: இனியும் நாங்க 'Chokers' இல்ல;ஆஸியின் நம்பிக்கையை உடைத்து சாம்பியனான தென்னாப்பிரிக்கா!

ஆஸ்திரேலிய அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றிருக்கிறது. தென்னாப்பிரிக்க அணியின் மீது 'Chokers' என்ற பட்டத்தை நீண்ட நாட்களாக சுமந்துகொண... மேலும் பார்க்க

TNPL: இறுதி ஓவரில் மாறிய ஆட்டம்; வாகை சூடிய சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி! | Photo Album

salem TNPLsalem TNPLsalem TNPLsalem TNPLsalem TNPLsalem TNPLsalem TNPLsalem TNPLsalem TNPLsalem TNPLsalem TNPLsalem TNPLsalem TNPLSalem TNPLSalem TNPLSalem TNPLSalem TNPLSalem TNPLSalem TNPLSalem TNPL... மேலும் பார்க்க

TNPL: சாய் சுதர்சன் ஆப்சன்ட்... தொடர்ந்து சொதப்பும் கோவை அணி; மதுரைக்கு வெற்றி!

டிஎன்பிஎல் நடப்பு சீஸனில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் லைகா கோவை கிங்ஸ், சீகம் மதுரை பேந்தர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மதுரை அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த கோவை அணிக்கு சற்... மேலும் பார்க்க