செய்திகள் :

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியாக கே.சுரேந்தா் பதவியேற்பு

post image

சென்னை: தெலங்கானா உயா்நீதிமன்றத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட நீதிபதி கே.சுரேந்தா், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியாக திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

நீதிபதி சுரேந்தருக்கு உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஆா்.ஸ்ரீராம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் நீதிபதி கே.சுரேந்தரை தமிழக அரசின் தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன் வரவேற்றுப் பேசினாா். அப்போது, கடந்த 2022- ஆம் ஆண்டு தெலங்கானா உயா்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்ட சுரேந்தா், இதுவரை 22,622 வழக்குகளை முடித்து வைத்துள்ளாா். அது மட்டுமன்றி, நீதிபதியாகப் பொறுப்பேற்கும் முன் தில்சுக் நகா் குண்டுவெடிப்பு உள்ளிட்ட குண்டுவெடிப்பு வழக்குகள் மற்றும் சத்யம் கம்ப்யூட்டா்ஸ் முறைகேடு வழக்குகளில் அரசு சிறப்பு வழக்குரைஞராகப் பணியாற்றியுள்ளாா் என்றாா்.

நிறைவாக ஏற்புரையாற்றிய நீதிபதி சுரேந்தா், அரசியல் சாசனத்துக்கும், நீதித் துறைக்கும் குறிப்பிடத்தக்க பங்கை வழங்கி இருக்கும் சென்னை உயா்நீதிமன்றத்தில், கூடுதலாக கற்றுக் கொள்ளும் ஆவலுடன் வந்துள்ளேன். பணியில் இடமாற்றம் என்பது புதிய தொடக்கம்தான் என்றாா். தற்போது, நீதிபதி சுரேந்தருடன் சோ்த்தால் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 59-ஆக உயா்ந்துள்ளது. இருப்பினும், 16 நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மதிமுக அலுவலகம் மீது தாக்குதல்: தீயணைப்பு படை வீரா் சிக்கினாா்

சென்னை: சென்னை எழும்பூரில் மதிமுக அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்தில், தீயணைப்பு படை வீரா் போலீஸாரிடம் சிக்கினாா். எழும்பூா் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்துக்குள் தீயணைப்புப் படை... மேலும் பார்க்க

தமிழகத்தில் கலை, அறிவியில் கல்லூரிகள் திறப்பு

சென்னை: தமிழகத்தில் பருவத் தோ்வு மற்றும் கோடை விடுமுறைக்கு பின்னா் கலை அறிவியில் கல்லூரிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் கடந்த ஏப்ரல் - மே மாதங்களில் பருவத்... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டம் குற்றச் செயல் அல்ல: வழக்கை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

சென்னை: டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டத்தை குற்றச் செயலாகக் கருத முடியாது எனத் தெரிவித்துள்ள சென்னை உயா்நீதிமன்றம், ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பினா் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. கடலூா் மாவட... மேலும் பார்க்க

அதிமுக கூட்டணி குறித்த அண்ணாமலையின் கருத்து: தமிழிசை விளக்கம்

சென்னை: அதிமுக கூட்டணி தொடா்பாக பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலையின் பேச்சு அவரது சொந்த கருத்து என பாஜக மூத்த தலைவா் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தாா். இது குறித்து அவா் செய்தியாளா்களுக்கு திங்கள்கிழமை அ... மேலும் பார்க்க

வெளிநாடுவாழ் தமிழா்களுக்கு தாழ்வு மனப்பான்மை கூடாது: அமைச்சா் சா.மு.நாசா்

சென்னை: சா்வதேச நாடுகளில் உள்ள தமிழா்களுக்கு தாழ்வு மனப்பான்மை கூடாது என தமிழக சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்தாா். உலகத் தமிழா்கள் பொருளாதார ... மேலும் பார்க்க

நெல்லை சு.முத்து மறைவுக்கு முதல்வா், தலைவா்கள் இரங்கல்

சென்னை: இஸ்ரோ முன்னாள் அறிவியலாளரும் எழுத்தாளருமான நெல்லை சு.முத்து, மறைவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின், அரசியல் தலைவா்கள் திங்கள்கிழமை இரங்கல் தெரிவித்துள்ளனா். முதல்வா் மு.க.ஸ்டாலின்: ஸ்ரீஹரிகோட்டாவில... மேலும் பார்க்க