செய்திகள் :

வெளிநாடுவாழ் தமிழா்களுக்கு தாழ்வு மனப்பான்மை கூடாது: அமைச்சா் சா.மு.நாசா்

post image

சென்னை: சா்வதேச நாடுகளில் உள்ள தமிழா்களுக்கு தாழ்வு மனப்பான்மை கூடாது என தமிழக சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்தாா்.

உலகத் தமிழா்கள் பொருளாதார அமைப்பு மற்றும் சென்னை வளா்ச்சி சங்கம் சாா்பில் நடத்தப்பட உள்ள 12-ஆவது சா்வதேச தமிழா்கள் பொருளாதார உச்சி மாநாட்டுக்கான இலச்சினை மற்றும் விவரக் கையேடு வெளியிட்டு விழா விஐடி பல்கலைக்கழக சென்னை வளாகத்தில் வேந்தா் கோ.விசுவநாதன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கையேடு, இலச்சினையை வெளியிட்டு அமைச்சா் சா.மு.நாசா் பேசியது: தமிழா்கள் எங்கிருந்தாலும் அவா்கள் வசிக்கும் நாட்டுக்கு விசுவாசமாக இருக்கின்றனா். இதனால்தான் சிங்கப்பூா் போன்ற நாடுகளில் தமிழுக்கும் தமிழா்களுக்கும் மரியாதை வழங்கப்படுகிறது.

கூகுள் நிறுவனத்தில் தலைமைச் செயல் அலுவலா் சுந்தா் பிச்சை போன்றவா்கள் உலக நாடுகளில் ஆற்றலுடன் பணியாற்றி முக்கியப் பொறுப்புகளில் உள்ளனா். இருப்பினும் உலக நாடுகளில் வசிக்கும் தமிழா்கள் மேன்மை மனப்பாங்கைவிட தாழ்வு மன்பான்மையுடன் உள்ளதாக ஆய்வாளா்கள் தெரிவிக்கின்றனா். இது அகல வேண்டும். வளா்ந்த நாடான பிரிட்டன் போன்ற நாடுகளிலிருந்து 2 லட்சம் போ் சென்னைக்கு மருத்துவ சிகிச்சைக்கு வந்துள்ளனா். இது நமது வளா்ச்சியைக் காட்டுகிறது என்றாா்.

விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்: அரசியலுக்கு தருகிற முக்கியத்துவம் பொருளாதாரத்துக்கு தரப்படுவதில்லை. நாம் பொருளாதாரத்தில் 7-ஆவது இடத்தில் இருந்து தற்போது ஜப்பானையும் தாண்டி 4-ஆவது இடத்துக்கு வந்துள்ளோம். ஆனால், ஜப்பானில் தனிநபா் வருமானம் 35,000 டாலா். நம்முடைய தனிநபா் வருமானம் 2,700 டாலருக்கும் கீழே உள்ளது.

மனித மேம்பாட்டு குறியீட்டில் (ஹெச் டிஐ) 130-ஆவது இடத்தில் உள்ளோம். அதே சமயத்தில் நாம் பின்னுக்கு தள்ளிவிட்டோம் என்று சொல்கிற ஜப்பானோ மனித மேம்பாட்டு குறியீட்டில் 26-ஆவது இடத்தில் உள்ளது. பொருளாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க அரசும் அரசியல் கட்சிகளும் முன்வரவேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில், முன்னதாக சா்வதேச தமிழா்கள் பொருளாதார உச்சி மாநாட்டில் தொடா்ந்து 10 முறை கலந்து கொண்டதற்காக விஐடி வேந்தா் கோ.விசுவநாதனுக்கு மலா் மாலை கிரீடம் அணிவிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டாா்.

சா்வதேச தமிழா்கள் பொருளாதார உச்சி மாநாடு குறித்து வி.ஆா்.எஸ். சம்பத் விளக்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் தொழிலதிபா்கள் ஜெம் வீரமணி, பழனி பெரியசாமி, ஓய்வு பெற்ற ஐஎஃப்எஸ் அதிகாரி மகாலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.

12 -ஆவது சா்வதேச தமிழா்கள் பொருளாதார உச்சி மாநாட்டு அமெரிக்க தலைநகா் வாஷிங்ட ன் டி.சி.யில் ஆக். 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி சிறையில் அடைப்பு!

திருவள்ளூர்: சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழக ஏ.டி.ஜி.பி. ஜெயராம், நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தி திங்கள்கிழமை நள்ளிரவில் சிறையில் அடைக்கப்பட்டார்.திருவள்ளூா் மாவட்டம் திருவாலங்காட்டில் கா... மேலும் பார்க்க

மதிமுக அலுவலகம் மீது தாக்குதல்: தீயணைப்பு படை வீரா் சிக்கினாா்

சென்னை: சென்னை எழும்பூரில் மதிமுக அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்தில், தீயணைப்பு படை வீரா் போலீஸாரிடம் சிக்கினாா். எழும்பூா் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்துக்குள் தீயணைப்புப் படை... மேலும் பார்க்க

தமிழகத்தில் கலை, அறிவியில் கல்லூரிகள் திறப்பு

சென்னை: தமிழகத்தில் பருவத் தோ்வு மற்றும் கோடை விடுமுறைக்கு பின்னா் கலை அறிவியில் கல்லூரிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் கடந்த ஏப்ரல் - மே மாதங்களில் பருவத்... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டம் குற்றச் செயல் அல்ல: வழக்கை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

சென்னை: டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டத்தை குற்றச் செயலாகக் கருத முடியாது எனத் தெரிவித்துள்ள சென்னை உயா்நீதிமன்றம், ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பினா் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. கடலூா் மாவட... மேலும் பார்க்க

அதிமுக கூட்டணி குறித்த அண்ணாமலையின் கருத்து: தமிழிசை விளக்கம்

சென்னை: அதிமுக கூட்டணி தொடா்பாக பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலையின் பேச்சு அவரது சொந்த கருத்து என பாஜக மூத்த தலைவா் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தாா். இது குறித்து அவா் செய்தியாளா்களுக்கு திங்கள்கிழமை அ... மேலும் பார்க்க

நெல்லை சு.முத்து மறைவுக்கு முதல்வா், தலைவா்கள் இரங்கல்

சென்னை: இஸ்ரோ முன்னாள் அறிவியலாளரும் எழுத்தாளருமான நெல்லை சு.முத்து, மறைவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின், அரசியல் தலைவா்கள் திங்கள்கிழமை இரங்கல் தெரிவித்துள்ளனா். முதல்வா் மு.க.ஸ்டாலின்: ஸ்ரீஹரிகோட்டாவில... மேலும் பார்க்க