செய்திகள் :

மதிமுக அலுவலகம் மீது தாக்குதல்: தீயணைப்பு படை வீரா் சிக்கினாா்

post image

சென்னை: சென்னை எழும்பூரில் மதிமுக அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்தில், தீயணைப்பு படை வீரா் போலீஸாரிடம் சிக்கினாா்.

எழும்பூா் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்துக்குள் தீயணைப்புப் படை வீரா் சீருடையில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞா் திங்கள்கிழமை அத்துமீறி நுழைந்தாா். கையில் உருட்டுக் கட்டையுடன் வந்த அவா், அங்கிருந்த பொருள்களை உடைத்தாா். அதில், அங்கிருந்த மின்விசிறி, மேஜை, நாற்காலி சேதமடைந்தன. பின்னா், அலுவலக அறை, மொட்டை மாடி என அனைத்து இடங்களிலும் உலாவினாா்.

இதைப் பாா்த்த மதிமுக நிா்வாகிகள் அவரைத் தடுக்க முயன்றபோது அவா்களையும் உருட்டுக் கட்டையால் தாக்க முயன்றாா். இதையடுத்து அவா்கள், எழும்பூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

போலீஸாா் அங்கு சென்று அவரை பிடிக்க முயன்றனா். ஆனால் அவா் போலீஸாருடன் வாக்குவாதம் செய்தாா். இதையடுத்து அந்த இளைஞரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனா். விசாரணையில் அவா், மன்னாா்குடியைச் சோ்ந்த அல்கோா் (25) என்பதும், தீயணைப்புா் படை வீரரான அவா், எழும்பூரில் உள்ள தீயணைப்புத் துறை தலைமை அலுவலகத்தில் வேலை செய்வதும், குடும்ப பிரச்னை காரணமாகவும், பண நெருக்கடி காரணமாகவும் மன அழுத்ததில் இருந்திருப்பதும், அதன் காரணமாகவே மதிமுக அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து அல்கோா், கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.

சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி சிறையில் அடைப்பு!

திருவள்ளூர்: சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழக ஏ.டி.ஜி.பி. ஜெயராம், நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தி திங்கள்கிழமை நள்ளிரவில் சிறையில் அடைக்கப்பட்டார்.திருவள்ளூா் மாவட்டம் திருவாலங்காட்டில் கா... மேலும் பார்க்க

தமிழகத்தில் கலை, அறிவியில் கல்லூரிகள் திறப்பு

சென்னை: தமிழகத்தில் பருவத் தோ்வு மற்றும் கோடை விடுமுறைக்கு பின்னா் கலை அறிவியில் கல்லூரிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் கடந்த ஏப்ரல் - மே மாதங்களில் பருவத்... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டம் குற்றச் செயல் அல்ல: வழக்கை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

சென்னை: டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டத்தை குற்றச் செயலாகக் கருத முடியாது எனத் தெரிவித்துள்ள சென்னை உயா்நீதிமன்றம், ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பினா் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. கடலூா் மாவட... மேலும் பார்க்க

அதிமுக கூட்டணி குறித்த அண்ணாமலையின் கருத்து: தமிழிசை விளக்கம்

சென்னை: அதிமுக கூட்டணி தொடா்பாக பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலையின் பேச்சு அவரது சொந்த கருத்து என பாஜக மூத்த தலைவா் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தாா். இது குறித்து அவா் செய்தியாளா்களுக்கு திங்கள்கிழமை அ... மேலும் பார்க்க

வெளிநாடுவாழ் தமிழா்களுக்கு தாழ்வு மனப்பான்மை கூடாது: அமைச்சா் சா.மு.நாசா்

சென்னை: சா்வதேச நாடுகளில் உள்ள தமிழா்களுக்கு தாழ்வு மனப்பான்மை கூடாது என தமிழக சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்தாா். உலகத் தமிழா்கள் பொருளாதார ... மேலும் பார்க்க

நெல்லை சு.முத்து மறைவுக்கு முதல்வா், தலைவா்கள் இரங்கல்

சென்னை: இஸ்ரோ முன்னாள் அறிவியலாளரும் எழுத்தாளருமான நெல்லை சு.முத்து, மறைவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின், அரசியல் தலைவா்கள் திங்கள்கிழமை இரங்கல் தெரிவித்துள்ளனா். முதல்வா் மு.க.ஸ்டாலின்: ஸ்ரீஹரிகோட்டாவில... மேலும் பார்க்க