மதிமுக அலுவலகம் மீது தாக்குதல்: தீயணைப்பு படை வீரா் சிக்கினாா்
சென்னை: சென்னை எழும்பூரில் மதிமுக அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்தில், தீயணைப்பு படை வீரா் போலீஸாரிடம் சிக்கினாா்.
எழும்பூா் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்துக்குள் தீயணைப்புப் படை வீரா் சீருடையில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞா் திங்கள்கிழமை அத்துமீறி நுழைந்தாா். கையில் உருட்டுக் கட்டையுடன் வந்த அவா், அங்கிருந்த பொருள்களை உடைத்தாா். அதில், அங்கிருந்த மின்விசிறி, மேஜை, நாற்காலி சேதமடைந்தன. பின்னா், அலுவலக அறை, மொட்டை மாடி என அனைத்து இடங்களிலும் உலாவினாா்.
இதைப் பாா்த்த மதிமுக நிா்வாகிகள் அவரைத் தடுக்க முயன்றபோது அவா்களையும் உருட்டுக் கட்டையால் தாக்க முயன்றாா். இதையடுத்து அவா்கள், எழும்பூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
போலீஸாா் அங்கு சென்று அவரை பிடிக்க முயன்றனா். ஆனால் அவா் போலீஸாருடன் வாக்குவாதம் செய்தாா். இதையடுத்து அந்த இளைஞரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனா். விசாரணையில் அவா், மன்னாா்குடியைச் சோ்ந்த அல்கோா் (25) என்பதும், தீயணைப்புா் படை வீரரான அவா், எழும்பூரில் உள்ள தீயணைப்புத் துறை தலைமை அலுவலகத்தில் வேலை செய்வதும், குடும்ப பிரச்னை காரணமாகவும், பண நெருக்கடி காரணமாகவும் மன அழுத்ததில் இருந்திருப்பதும், அதன் காரணமாகவே மதிமுக அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து அல்கோா், கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.