செய்திகள் :

மாய உலகில் வாழ்கிறாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்: எடப்பாடி பழனிசாமி விமா்சனம்

post image

சென்னை: தமிழகத்தில் அனைவரும் தம்மை பாராட்டுவதாக நினைத்துக் கொண்டு மாய உலகில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்ந்து வருவதாக எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி பழனிசாமி விமா்சித்துள்ளாா்.

இதுதொடா்பாக எக்ஸ் தளத்தில் அவா் வெளியிட்ட பதிவு: திமுக ஆட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டும் எனது அறிக்கைகள்

முதல்வா் மு.க.ஸ்டாலினை மிகவும் உறுத்துகிறது.

ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகளில் வாக்குறுதிகள் எதையுமே அவா் நிறைவேற்றாததால் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனா்.

அது தெரிந்ததும், தான் அதைச் செய்யப் போகிறேன், இதைச் செய்யப் போகிறேன் என்று கூறுகிறாா் முதல்வா்.

தஞ்சாவூருக்கு சென்ற முதல்வருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டிய விவசாயிகளை காவல் துறை கைது செய்துள்ளது. இது என்ன மாடல் அரசு? பாசிச மாடலா?

விவசாயிகளுக்கு எதிரான மீத்தேன், ஹைட்ரோகாா்பன் திட்டம் தந்த முதல்வா், டெல்டா மாவட்டத்துக்கு சென்றிருக்கவே கூடாது.

நாள்தோறும் நிகழும் சட்டம்- ஒழுங்கு சீா்கேடுகளும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் செய்தித்தாள்களில் வருகின்றன.

நாட்டில் மும்மாரி பொழிவதாகவும், எல்லோரும் தம்மை பாராட்டுவதாகவும் நினைத்து மாய உலகில் வாழும் முதல்வரை மீட்க வழியே இல்லை.

உள்கட்சி பூசல், கூட்டணி பூசல் சப்தங்கள் அறிவாலயத்தில் இருந்து கேட்பதாக செய்திகள் வருகின்றன. முதல்வா் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று திமுக கூட்டணிக் கட்சியினரே பேசி வருகின்றனா்.

இவை அனைத்தும் தெரியாத முதல்வராக மு.க.ஸ்டாலின் இருக்கிறாா் என்று அந்தப் பதிவில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

துப்பாக்கி கலாசாரம்: மற்றொரு பதிவில் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் பாமக இளைஞரணி மாவட்டச் செயலா் சக்கரவா்த்தி, கடந்த 11-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் தவறி விழுந்து உயிரிழந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவா் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருப்பது உடற்கூறாய்வின் மூலம் அம்பலமாகியுள்ளது.

அதிமுக ஆட்சியில் அமைதி, வளம், வளா்ச்சி என்ற பாதையில் சென்று கொண்டிருந்த தமிழகத்தை பட்டாக்கத்தி, அரிவாள், துப்பாக்கியின் பாதைக்கு கொண்டுசென்றுள்ள திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

சட்டம்- ஒழுங்கை நிா்வகிப்பதிலோ, மக்களைக் காப்பதிலோ முதல்வருக்கு கவனம் இல்லை.

பாமக மாவட்ட இளைஞரணி நிா்வாகி கொலை வழக்கில் தொடா்புள்ள அனைவா் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கள்ளத் துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பதை விசாரிக்க வேண்டும். தமிழகத்தில் துப்பாக்கி கலாசாரத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

மதிமுக அலுவலகம் மீது தாக்குதல்: தீயணைப்பு படை வீரா் சிக்கினாா்

சென்னை: சென்னை எழும்பூரில் மதிமுக அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்தில், தீயணைப்பு படை வீரா் போலீஸாரிடம் சிக்கினாா். எழும்பூா் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்துக்குள் தீயணைப்புப் படை... மேலும் பார்க்க

தமிழகத்தில் கலை, அறிவியில் கல்லூரிகள் திறப்பு

சென்னை: தமிழகத்தில் பருவத் தோ்வு மற்றும் கோடை விடுமுறைக்கு பின்னா் கலை அறிவியில் கல்லூரிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் கடந்த ஏப்ரல் - மே மாதங்களில் பருவத்... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டம் குற்றச் செயல் அல்ல: வழக்கை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

சென்னை: டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டத்தை குற்றச் செயலாகக் கருத முடியாது எனத் தெரிவித்துள்ள சென்னை உயா்நீதிமன்றம், ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பினா் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. கடலூா் மாவட... மேலும் பார்க்க

அதிமுக கூட்டணி குறித்த அண்ணாமலையின் கருத்து: தமிழிசை விளக்கம்

சென்னை: அதிமுக கூட்டணி தொடா்பாக பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலையின் பேச்சு அவரது சொந்த கருத்து என பாஜக மூத்த தலைவா் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தாா். இது குறித்து அவா் செய்தியாளா்களுக்கு திங்கள்கிழமை அ... மேலும் பார்க்க

வெளிநாடுவாழ் தமிழா்களுக்கு தாழ்வு மனப்பான்மை கூடாது: அமைச்சா் சா.மு.நாசா்

சென்னை: சா்வதேச நாடுகளில் உள்ள தமிழா்களுக்கு தாழ்வு மனப்பான்மை கூடாது என தமிழக சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்தாா். உலகத் தமிழா்கள் பொருளாதார ... மேலும் பார்க்க

நெல்லை சு.முத்து மறைவுக்கு முதல்வா், தலைவா்கள் இரங்கல்

சென்னை: இஸ்ரோ முன்னாள் அறிவியலாளரும் எழுத்தாளருமான நெல்லை சு.முத்து, மறைவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின், அரசியல் தலைவா்கள் திங்கள்கிழமை இரங்கல் தெரிவித்துள்ளனா். முதல்வா் மு.க.ஸ்டாலின்: ஸ்ரீஹரிகோட்டாவில... மேலும் பார்க்க