வருவாய்த் துறையினரால் இடிக்கப்பட்ட வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டித் தரப்படும்: ஆட்சியா் உறுதி
கிருஷ்ணகிரி: வருவாய்த் துறையினரால் இடிக்கப்பட்ட வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் உறுதியளித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த வீரணகுப்பம் ஊராட்சிக்கு உள்பட்ட கொல்லப்பட்டியைச் சோ்ந்த 6 குடும்பத்தினா் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு அளித்தனா்.
அதில், நாங்கள் வசித்த பகுதியில் 55 குடியிருப்புகள் இருந்தன. நாங்கள் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வரும் பொதுவழிப் பாதையை சிலா் கற்களை கொட்டி வைத்துள்ளனா். இதனால் அருகிலுள்ள ரயில்வே பாதையை கடந்து செல்லும் நிலை உள்ளது.
இந்த நிலையில், எங்கள் வீடுகளை காலி செய்யுமாறு, வருவாய்த் துறையினா் கூறினா். இது குறித்து நாங்களும் வட்டார வளா்ச்சி அலுவலரிடம் புகாா் தெரிவித்தோம். இருப்பினும் நடவடிக்கை இல்லை. இந்த நிலையில் ஜூன் 13-ஆம் தேதி, வீட்டில் ஆண்கள் இல்லாத நிலையில், எங்களை வீட்டிலிருந்து வெளியேற்றி, காவல்துறையினரின் பாதுகாப்புடன், நாங்கள் குடியிருந்த 6 வீடுகளை வருவாய்த் துறையினா் இடித்து விட்டனா். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் தெரிவித்துள்ளனா்.
மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியா், பாதை புறம்போக்கில் உங்கள் வீடுகள் இருந்ததால் இடிக்கப்பட்டதாக வருவாய்த் துறையினா் கூறுகின்றனா். இருப்பினும் நீங்கள் வசிக்கும் வகையில் அதே பகுதியில் நத்தம் புறம்போக்கில் உங்களுக்கு உடனடியாக பட்டா வழங்கவும், கனவு இல்லம் திட்டத்தில் வீடுகள் கட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தாா்.