செய்திகள் :

கைலாஷ் மானசரோவர் யாத்திரை: சிக்கிம் வந்தடைந்த முதல் குழு!

post image

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கான 36 பக்தர்கள் கொண்ட முதல் குழு, சிக்கிமின் தலைநகர் கேங்க்டாக்கிற்கு வந்தடைந்தது.

இந்தியா-சீன ராணுவத்தினர் இடையே கல்வான் பகுதியில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக கைலாஷ் மானசரோவர் யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.

இந்த யாத்திரை ஜூன் முதல் செப்டம்பர் வரை நடைபெறும். கைலாஷ் மானசரோவர் யாத்திரை என்பது கயிலை மலை மற்றும் மானசரோவர் ஏரிக்குச் செல்லும் புனிதப் பயணமாகும்.

சுற்றுலா, சிவில் விமானப் போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சி.எஸ். ராவ் கூறுகையில்,

மேற்கு வங்காளத்தின் சிலிகுரியில் உள்ள பாக்டோக்ரா விமான நிலையத்தில் தரையிறங்கி 36 பேர் கொண்ட குழு சாலை வழியாக கேங்டாக்கை அடைந்தனர். அவர்களை ரெனாக்கில் உள்ள சுற்றுலா மேம்பாட்டுக் கழக அதிகாரிகளால் வரவேற்றனர்.

இந்தாண்டு யாத்திரைக்காக 750 இந்தியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் 500 பேர் நாது லா பாதை வழியாக 10 குழுக்களாகவும், 250 பேர் உத்தரகண்டில் உள்ள லிபுலேக் கணவாய் வழியாகவும் பயணம் செய்தனர்.

இதனிடையே முதல் யாத்திரை குழு ஞாயிற்றுக்கிழமை இரவு கேங்டாக்கில் தங்கி திங்கள்கிழமை யாத்திரைத் தொடங்கியது.

அவர்கள் ஜூன் 16ல் அன்று 17 மைலில் தங்கி, பின்னர் ஜூன் 20 அன்று இந்தியா-சீன எல்லையைக் கடப்பதற்கு முன்பு செராதாங்கிற்குச் செல்வார்கள்.

நாது லா-கைலாஷ் மானசரோவர் யாத்திரை என்பது அரசு அடிப்படையிலான யாத்திரையாகும். மேலும் சிக்கிம் சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் முழு யாத்திரைக்கும் பொறுப்பேற்கும்.

மேலும், கேங்டாக்கிலிருந்து கைலாஷ் மலை, மானசரோவர் ஏரிக்குப் பக்தர்களின் பயணத்தை சிக்கிம் சுற்றுலாத்துறை கவனித்துக் கொள்ளும் என்று அவர் கூறினார்.

மே மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 2.8% அதிகரிப்பு! இறக்குமதி 1% குறைவு!

கடந்த மே மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி மதிப்பு 2.8% அதிகரித்துள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு மே மாதத்திற்கான நாட்டின் மொத்த வணிகப் பொருட்கள் மற்றும் சேவை ஏற்றுமதி 71.12 பில்ல... மேலும் பார்க்க

சத்ரபதி சிவாஜி சிலையைத் தொடரும் துரதிருஷ்டம்: கட்டுமானத்தில் பெரிய ஓட்டை!

மும்பை: ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜி மன்னரின் சிலை நிறுவப்பட்ட இடத்தில் சிலையை தாங்கி நிற்கும் கட்டுமானத்தில் பெரிய ஓட்டை விழுந்துள்ளது. மராட்டிய பேரரசர் சிவாஜியின் புகழைப் பறைசாற்றும் வகையில், ... மேலும் பார்க்க

இது போருக்கான சகாப்தம் அல்ல: மோடி

இது போருக்கான சகாப்தம் அல்ல என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.மூன்று நாடுகளுக்கான 5 நாள்கள் அரசுமுறைப் பயணத்தின் முதல் கட்டமாக, மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான சைப்ரஸுக்கு பிரதமா் ... மேலும் பார்க்க

கேரளத்தில் கொட்டித்தீர்க்கும் பருவமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

கேரளத்தில் திங்கள்கிழமையும் இடைவிடாத பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து உள்பட மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொ... மேலும் பார்க்க

பிரதமர் மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது!

பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது திங்கள்கிழமை வழங்கப்பட்டது.மூன்று நாடுகளுக்கான 5 நாள்கள் அரசுமுறைப் பயணத்தின் முதல் கட்டமாக, மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான சைப்ரஸுக்க... மேலும் பார்க்க

உ.பி.யில் முத்தமிட்டு விளையாடிய நபரின் நாக்கை கடித்த பாம்பு !

உத்தரப் பிரதேசத்தில் பாம்புக்கு முத்தமிட்டு விளையாடிய நபரை அந்த பாம்பு கடித்ததில் அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். உத்தரப் பிரதேச மாநிலம், அம்ரோஹாவைச் சேர்ந்த விவசாயி ஜிதேந்திர குமார்.... மேலும் பார்க்க