Rajini: "'கண்ணப்பா' படத்தைப் பார்த்த பிறகு ரஜினிகாந்த்...." - நெகிழ்ந்த மோகன் பாபு
நாட்டாமை படத்தின் தெலுங்கு ரீமேக் ஆன 'பெத்தராயுடு' படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஓட்டி மோகன் பாபுவுடன் நடிகர் ரஜினிகாந்த் நேற்று (ஜூன் 16) கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்.
மேலும், மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு நடிப்பில் வெளியாகி இருக்கும் 'கண்ணப்பா' படத்தையும் குடும்பத்துடன் பார்த்திருக்கிறார். இதனை மோகன் பாபு புகைப்படத்துடன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

மோகன் பாபு வெளியிட்டிருக்கும் பதிவில், "'பெத்தராயுடு' படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. இதே நாளில் என் சிறந்த நண்பர் ரஜினிகாந்த் அவரது குடும்பத்துடன் கண்ணப்பா திரைப்படத்தைப் பார்த்தார்.
படத்தைப் பார்த்த பிறகு அவர் அளித்த அன்பு, அரவணைப்பு மற்றும் ஊக்கம் ஆகியவற்றை என் வாழ்நாளில் மறக்க முடியாதவை. நன்றி நண்பர்" என்று பதிவிட்டிருக்கிறார்.
On June 15, Pedarayudu completed 30 glorious years since its theatrical release.
— Mohan Babu M (@themohanbabu) June 16, 2025
And on the same day, my best friend @rajinikanth watched #Kannappa along with his family.
The love, warmth, and encouragement he gave after the film is something I will never forget.
Thank you,… pic.twitter.com/u5iqXlsjfr
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...