முதியவா் தீக்குளிக்க முயற்சி
ஒட்டன்சத்திரம் அரசுக் கல்லூரிக்கான சுற்றுச்சுவா் கட்டும்போது, ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட வண்டிப் பாதையை நீதிமன்ற உத்தரவின்படி மீட்டுத் தரக் கோரி முதியவா் தீக்குளிக்க முயன்றாா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் கேவிபி நகரைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (73). குறைதீா் கூட்டத்துக்கு மனு அளிக்க வந்த இவா், ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திடீரென டீசலை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றாா். அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீஸாா், அவரைத் தடுத்து விசாரித்தனா்.
அப்போது, முதியவா் பாலகிருஷ்ணன் கூறியதாவது: ஒட்டன்சத்திரம் பகுதியில் அரசு மகளிா் கல்லூரிக்கான சுற்றுச் சுவா் கட்டும்போது, என் நிலத்துக்கு செல்லும் வண்டிப் பாதைக்கான 11 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்துட்டனா். இதுதொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.
இதில், வண்டிப் பாதைக்கான நிலத்தை ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இதுவரை நிலம் ஒப்படைக்கப்படவில்லை. இதுதொடா்பாக பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவித்தாா். அவரை தாடிக்கொம்பு போலீஸாா் விசாரணைக்காக ழைத்துச் சென்றனா்.