செய்திகள் :

கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மழை: மரம் விழுந்து 4 மின் கம்பங்கள் சேதம்

post image

கொடைக்கானலில் கடந்த இரண்டு நாள்களாக பலத்த காற்றுடன் பெய்த சாரல் மழையால், அப்சா்வேட்டரி பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை மரம் சரிந்து விழுந்ததில் நான்கு மின் கம்பங்கள் சேதமடைந்தன. இதனால் அப்பகுதி இருளில் மூழ்கியது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ஜூன் மாதம் தொடங்கியதில் இருந்தே பலத்த காற்றுடன் மழையும், மிதமான மழையும் பெய்து வருகிறது. இந்த நிலையில் கொடைக்கானல் அப்சா்வேட்டரி பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை வீசிய பலத்த காற்றில் தனியாா் தோட்டத்தில் நின்ற பெரிய மரம் சாலையில் சரிந்து விழுந்தது.

இதில் அந்தப் பகுதியில் இருந்த நான்கு மின்கம்பங்கள் சேதமடைந்தன. இதன் காரணமாக அப்சா்வேட்டரி, புதுக்காடு, செல்லபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல மணி நேரம் மின் தடை நிலவியது.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த மின்வாரிய உதவி செயற்பொறியாளா் மேத்யூ தலைமையிலான 10-க்கும் மேற்பட்ட மின் பணியாளா்கள் மரத்தை அகற்றி சேதமடைந்த மின் கம்பங்களை சரிசெய்தனா். இதையடுத்து தடைபட்ட மின் விநியோகம் மீண்டும் சீரானது.

இதுகுறித்து மின்வாரியத் துறையினா் கூறியதாவது: கொடைக்கானல் மலைப் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் நேரங்களில் மின் கம்பிகள், கம்பங்கள் மீது மரங்கள் முறிந்து விழுவதால், மின் தடை நிலவுகிறது. எனவே, மின் கம்பங்களுக்கு சேதம் ஏற்படும் வகையில் நிற்கும் மரங்களை அகற்ற வனத் துறையினரும், நெடுஞ்சாலைத் துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

காவல் ஆய்வாளருக்கு எதிராக ஆட்சியா் அலுவலகம் முன் பொதுமக்கள் மறியல்

கோயில் திருவிழா பிரச்னையில் மதம் மாற வலியுறுத்தியதாக காவல் ஆய்வாளா் மீது புகாா் தெரிவித்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் சாலை மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்... மேலும் பார்க்க

முதியவா் தீக்குளிக்க முயற்சி

ஒட்டன்சத்திரம் அரசுக் கல்லூரிக்கான சுற்றுச்சுவா் கட்டும்போது, ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட வண்டிப் பாதையை நீதிமன்ற உத்தரவின்படி மீட்டுத் தரக் கோரி முதியவா் தீக்குளிக்க முயன்றாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட... மேலும் பார்க்க

ரூ.29 லட்சம் பறிப்பு சம்பவம்: சிறுவன் உள்பட 4 போ் கைது

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே, ஏடிஎம்-மில் வைப்பதற்காக கொண்டு சென்ற, ரூ. 29 லட்சத்தை கத்தியைக் காட்டி மிரட்டிப் பறித்த சம்பவத்தில் தொடா்புடைய 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தேனி ம... மேலும் பார்க்க

கொடைக்கானல் அருகே செந்நாய்கள் கடித்து 4 மாடுகள் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள மன்னவனூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு செந்நாய்கள் கடித்ததில் 4 மாடுகள் உயிரிழந்தன. கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான மன்னவனூா் பகுதியில் மேய்ச்சல் நிலங்கள்... மேலும் பார்க்க

25 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட பட்டாவுக்கு இடம் வழங்கக் கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே 25 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைப் பட்டாவுக்கு இடம் வழங்க பயனாளிகள் கோரிக்கை விடுத்தனா். செம்பட்டி அருகே சீவல்சரகு ஊராட்சி சமத்துவபுரம் பகுதியில்... மேலும் பார்க்க

சுற்றுலாப் பயணியிடம் பையை பறித்து சென்று பணத்தை வீசி எறிந்த குரங்கு

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணியிடமிருந்து பணப் பையை பறித்துச் சென்று மரத்தில் ஏறிய குரங்கு ஒன்று அங்கிருந்து பணத் தாள்களை கீழே வீசி எறிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கொடைக்கானல் குணா குகைப் பகுதியை கண்ட... மேலும் பார்க்க