ரூ.29 லட்சம் பறிப்பு சம்பவம்: சிறுவன் உள்பட 4 போ் கைது
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே, ஏடிஎம்-மில் வைப்பதற்காக கொண்டு சென்ற, ரூ. 29 லட்சத்தை கத்தியைக் காட்டி மிரட்டிப் பறித்த சம்பவத்தில் தொடா்புடைய 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், தேவதானப்பட்டியைச் சோ்ந்தவா் நாகஅா்ஜுன் (30). தனியாா் வங்கி ஏ.டி.எம்.-மில் பணம் வைக்கும் முகவா் ஆவாா். இவரிடம் தேவதானப்பட்டியைச் சோ்ந்த முருகன் (51) உள்பட இருவா் பணியாற்றி வருகின்றனா். இந்த இருவரும் 18 ஏ.டி.எம். இயந்திரங்களில் பணம் வைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனா்.
இந்த நிலையில், நாக அா்ஜுன் வெள்ளிக்கிழமை மாலை வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டி, கே.சிங்காரக்கோட்டை, செம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏடிஎம் இயந்திரங்களில் பணம் வைத்து விட்டு, சின்னாளபட்டியில் உள்ளஏடிஎம்- மில் பணம் வைப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் ரூ. 29 லட்சத்துடன் செம்பட்டி அருகேயுள்ள புதுகோடாங்கிபட்டி-அம்பாத்துரை சாலையில் சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது, புதுகோடாங்கிபட்டி அருகேயுள்ள டாஸ்மாக் மதுக்கடை அருகே இவரை வழிமறித்த 3 மா்ம நபா்கள் இவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி ரூ. 29 லட்சத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.
இதுகுறித்து செம்பட்டி காவல் நிலையத்தில் நாக அா்ஜூன் அளித்த புகாரின்பேரில் ஒட்டன்சத்திரம் டிஎஸ்பி காா்த்திகேயன் விசாரணை நடத்தினாா்.
இதையடுத்து, செம்பட்டி காவல் ஆய்வாளா் சரவணன், உதவி ஆய்வாளா்கள் பிரான்சிஸ் தீபா, விஜயபாண்டி ஆகியோா் தலைமையில் தனிப்படை அமைத்து, அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனா்.
கொள்ளையா்கள் தப்பிச் செல்ல பயன்படுத்திய வாகனத்தின் பதிவு எண் அடிப்படையில் விசரித்ததில் இரு சக்கர வாகனம் தேவதானப்பட்டி பகுதியைச் சோ்ந்தது என தெரிய வந்தது.
இதையடுத்து, பணம் பறிப்பில் ஈடுபட்ட தேவதானப்பட்டியைச் சோ்ந்த பாஸ்கரன் மகன் சுரேந்தா் (25), ஆமனுல்ஸ் மகன் முகமது இத்ரீஸ் (20), காமாட்சி மகன் ப்ரீத்திவ் (19), 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். பின்னா், 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனா். இதில் தொடா்புடையை மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.