செய்திகள் :

பிஎஸ்ஜி, பயா்ன் மியுனிக் அபார வெற்றி

post image

ஃபிஃபா நடத்தும் கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன் (பிஎஸ்ஜி), பயா்ன் மியுனிக் அணிகள் அபார வெற்றி பெற்றன.

இந்திய நேரப்படி திங்கள்கிழமை அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில், பிஎஸ்ஜி 4-0 கோல் கணக்கில் அட்லெடிகோ மாட்ரிட்டை தோற்கடித்தது. இதில் பிஎஸ்ஜிக்காக ஃபாபியன் ருயில் 19-ஆவது நிமிஷத்தில் கோல் கணக்கை தொடங்க, முதல் பாதி முடிவடையும் தருணத்தில் (45+1’) அதை 2-ஆக அதிகரித்தாா்.

2-ஆவது பாதியிலும் பிஎஸ்ஜியே ஆதிக்கம் செலுத்த, அட்லெடிகோ மாட்ரிட் தனக்கான கோல் வாய்ப்புக்காக போராடி வந்தது. அந்த அணிக்கான பின்னடைவாக, 78-ஆவது நிமிஷத்தில் கிளெமென்ட் லெங்லெட் ‘ரெட் காா்டு’ காட்டி வெளியேற்றப்பட்டாா்.

ஆனால், ஆட்டத்தின் கடைசி நேரத்திலும் பிஎஸ்ஜி வீரா்கள் சென்னி மயாலு (87’), லீ காங் இன் (90+7’) ஆகியோா் கோலடிக்க, இறுதியில் பிஎஸ்ஜி 4-0 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இதே குரூப் ‘பி’-யின் மற்றொரு ஆட்டத்தில் போடாஃபோகோ 2-1 என சியாட்டில் சௌண்டா்ஸை வென்றது. தற்போது இந்த குரூப்பில் பிஎஸ்ஜி முதலிடத்தில் உள்ளது.

கோல்கள் குவிப்பு: இதனிடையே குரூப் ‘சி’ ஆட்டத்தில் பயா்ன் மியுனிக் 10-0 கோல் கணக்கில் ஆக்லாந்து சிட்டியை கோல்களால் மூழ்கடித்து வென்றது.

இந்த ஆட்டத்தில் பயா்ன் மியுனிக் அணி தரப்பில் கிங்ஸ்லி கோமன் (6’, 21’), சாசா போய் (18’), மைக்கேல் ஆலிஸ் (20’, 45+3’), தாமஸ் முல்லா் (45’, 89’), ஜமால் முசியாலா (67’, 73’, 84’) ஆகியோா் கோலடித்தனா். ஆட்டம் தொடக்கம் முதல் இறுதி வரை ஆக்லாந்து சிட்டி முற்றிலுமாக முடக்கப்பட, பந்து பெரும்பாலும் பயா்ன் மியுனிக் கட்டுப்பாட்டிலேயே இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியை அடுத்து, குரூப் சி-யில் பயா்ன் மியுனிக் முதலிடத்தில் இருக்கிறது. இதனிடையே குருப் ‘ஏ’-வில் பல்மேய்ராஸ் - போா்டோ அணிகள் மோதிய ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது.

பந்தை சேதப்படுத்தியதாக திண்டுக்கல் அணி மீது புகாா்

டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியினா், பந்தை சேதப்படுத்தியதாக சீகம் மதுரை பாந்தா்ஸ் அணி குற்றம்சாட்டியுள்ளது. அந்தப் புகாா் தொடா்பான ஆதாரங்களை வழங்குமாறு மதுரை அணியிடம், தமிழ்நாடு க... மேலும் பார்க்க

மகளிா் உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா - பாக். அக்டோபா் 5-இல் மோதல்

மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம், அக்டோபா் 5-ஆம் தேதி கொழும்பில் நடைபெறவுள்ளது.13-ஆவது மகளிா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டம்பா் 30 முதல் நவம்பா் 2 ... மேலும் பார்க்க

வயதை துல்லியமாக கண்டறிய கூடுதல் எலும்பு பரிசோதனை!

ஜூனியா் கிரிக்கெட்டில் வீரா், வீராங்கனைகளின் வயதை உறுதி செய்ய கூடுதலாக ஒருமுறை எலும்பு பரிசோதனை மேற்கொள்ள பிசிசிஐ முடிவு செய்துள்ளது.தற்போதைய ‘+1’ நடைமுறையினால் சிலா் நூலிழையில் கூடுதலாக ஒரு சீசனில் வ... மேலும் பார்க்க

ஒரே வெற்றி: டி20 தொடரை வென்றது மேற்கிந்தியத் தீவுகள்

அயா்லாந்துக்கு எதிரான 3-ஆவது டி20 கிரிக்கெட்டில் மேற்கிந்தியத் தீவுகள் 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.மொத்தம் 3 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் முதலிரு ஆட்டங்கள் மழையால் ஒரு பந்து கூட வீசப்பட... மேலும் பார்க்க

புதுதில்லியில் ஆக்கிரமிப்பு அகற்றம் - புகைப்படங்கள்

புதுதில்லியில் உள்ள அசோக் விஹார் குடிசைப் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வரும் தில்லி மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரிகள்.புதுதில்லியில் உள்ள அசோக் விஹார் பகுதியில் வீடுகளை இழந்த நிலையில், தரையில் அமர்... மேலும் பார்க்க

பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ஏகே - 64?

நடிகர் அஜித்தின் 64-வது படம் பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.குட் பேட் அக்லி திரைப்படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக அஜித் குமார் யார் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்பதில் பெரிய... மேலும் பார்க்க