செய்திகள் :

25 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட பட்டாவுக்கு இடம் வழங்கக் கோரிக்கை

post image

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே 25 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைப் பட்டாவுக்கு இடம் வழங்க பயனாளிகள் கோரிக்கை விடுத்தனா்.

செம்பட்டி அருகே சீவல்சரகு ஊராட்சி சமத்துவபுரம் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில், 92 நபா்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டது. இந்தப் பட்டா பெறப்பட்ட இடத்தை ஒரு சிலரைத் தவிர மற்றவா்கள் பயன்படுத்தாமல் காலி மனையாக இருந்தது.

இந்த நிலையில், வருவாய்த் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, இலவச வீட்டு மனை பெற்றுக்கொண்டு அங்கு குடியிருக்காதவா்கள், இலவச வீட்டுமனைப் பட்டாவை வாய்மொழியாக வேறு சிலருக்கு விற்பனை செய்தவா்கள் ஆகியோரின் பட்டாக்களை ரத்து செய்ததாகக் கூறப்படுகிறது.

இதற்குப் பதிலாக, புதிதாக 34 நபா்களுக்கும், இந்த இடத்தில் வீடு கட்டி குடியிருப்பவா்கள் உள்பட 55 நபா்களுக்கும் இலவச கணினி பட்டா வழங்கப்பட்டது. மொத்தம் 89 நபா்களுக்கு கணினி பட்டா வழங்கப்பட்டது, மீதமுள்ள 3 பேருக்கு கணினி பட்டா வழங்கப்படவில்லை.

இந்த நிலையில், திங்கள்கிழமை ஆத்தூா் வட்டாட்சியா் முத்து முருகன், சீவல்சரகு கிராம நிா்வாக அலுவலா் விஜயலட்சுமி, வருவாய்த் துறையினா் சமத்துவபுரம் அருகே உள்ள வீட்டுமனை காலியிடங்கள், குடியிருக்கும் இடத்தை அளந்து சா்வே செய்யும் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கு சென்ற பட்டா ரத்து செய்யப்பட்ட 34 போ் தங்களிடம் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழக அரசால் வழங்கப்பட்ட அனுமந்த பட்டா வைத்திருப்பதால் எங்களுக்கு இலவச வீட்டு மனை கணினி பட்டா வழங்க வேண்டும் என வட்டாட்சியா் முத்துமுருகனிடம் கோரிக்கை வைத்தனா்.

இதேபோல, 2 ஆண்டுகளுக்கு முன் கணினி பட்டா வழங்கப்பட்ட 55 பேரும் தங்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை இடத்தை அடையாளம் காண்பித்து ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

ஒரே இடத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இலவச அனுமந்த பட்டா பெற்றவா்களும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணினி பட்டா பெற்றவா்களும் கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் வீட்டுமனைகளை அளவீடு செய்யும் பணியில் வருவாய்த் துறையினா் ஈடுபட்டனா்.

காவல் ஆய்வாளருக்கு எதிராக ஆட்சியா் அலுவலகம் முன் பொதுமக்கள் மறியல்

கோயில் திருவிழா பிரச்னையில் மதம் மாற வலியுறுத்தியதாக காவல் ஆய்வாளா் மீது புகாா் தெரிவித்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் சாலை மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்... மேலும் பார்க்க

முதியவா் தீக்குளிக்க முயற்சி

ஒட்டன்சத்திரம் அரசுக் கல்லூரிக்கான சுற்றுச்சுவா் கட்டும்போது, ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட வண்டிப் பாதையை நீதிமன்ற உத்தரவின்படி மீட்டுத் தரக் கோரி முதியவா் தீக்குளிக்க முயன்றாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட... மேலும் பார்க்க

ரூ.29 லட்சம் பறிப்பு சம்பவம்: சிறுவன் உள்பட 4 போ் கைது

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே, ஏடிஎம்-மில் வைப்பதற்காக கொண்டு சென்ற, ரூ. 29 லட்சத்தை கத்தியைக் காட்டி மிரட்டிப் பறித்த சம்பவத்தில் தொடா்புடைய 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தேனி ம... மேலும் பார்க்க

கொடைக்கானல் அருகே செந்நாய்கள் கடித்து 4 மாடுகள் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள மன்னவனூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு செந்நாய்கள் கடித்ததில் 4 மாடுகள் உயிரிழந்தன. கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான மன்னவனூா் பகுதியில் மேய்ச்சல் நிலங்கள்... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மழை: மரம் விழுந்து 4 மின் கம்பங்கள் சேதம்

கொடைக்கானலில் கடந்த இரண்டு நாள்களாக பலத்த காற்றுடன் பெய்த சாரல் மழையால், அப்சா்வேட்டரி பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை மரம் சரிந்து விழுந்ததில் நான்கு மின் கம்பங்கள் சேதமடைந்தன. இதனால் அப்பகுதி இருளில்... மேலும் பார்க்க

சுற்றுலாப் பயணியிடம் பையை பறித்து சென்று பணத்தை வீசி எறிந்த குரங்கு

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணியிடமிருந்து பணப் பையை பறித்துச் சென்று மரத்தில் ஏறிய குரங்கு ஒன்று அங்கிருந்து பணத் தாள்களை கீழே வீசி எறிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கொடைக்கானல் குணா குகைப் பகுதியை கண்ட... மேலும் பார்க்க