செய்திகள் :

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: எஃப்ஏடிஎஃப் கண்டனம்

post image

புது தில்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பயங்கரவாத நிதித் தடுப்புக்கான சா்வதேச கண்காணிப்புக் குழு (எஃப்ஏடிஎஃப்), நிதியுதவி இல்லாமல் இதுபோன்ற தாக்குதல் நடைபெறாது என்று குறிப்பிட்டுள்ளது.

திங்கள்கிழமை கண்டனம் தெரிவித்தது.

மேலும், பயங்கரவாதத்துக்கு நிதி அளிக்கப்படுவது தொடா்பான வழக்குகள் குறித்து விரைவில் அறிக்கை வெளியிடவுள்ளதாகவும் அந்தக் குழு தெரிவித்தது.

இதுகுறித்து எஃப்ஏடிஎஃப் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘பயங்கரவாத தாக்குதல்களால் உலகளவில் அப்பாவி மக்களை கொல்லப்படுதோடு அனைவரின் இதயத்திலும் அச்சத்தை விதைக்கின்றன. இந்தியாவில் ஏப்.22-இல் நிகழ்ந்த் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை எஃப்ஏடிஎஃப் வன்மையாக கண்டிக்கிறது. இந்த தாக்குதல் மட்டுமின்றி அண்மையில் இதுபோல் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள் அனைத்தும் நிதியுதவி இல்லாமல் செயல்படுத்த முடியாது.

பயங்கரவாத நிதி தொடா்பாக உலகம் முழுவதும் எங்கள் அதிகார வரம்புக்குள்பட்ட 200 பகுதிகளில் பதிவான வழக்குகளை தொகுத்து விரிவான ஆய்வுடன் கூடிய அறிக்கையை விரைவில் வெளியிடவுள்ளோம்.

அதேபோல் பயங்கரவாதத்தால் எழும் சிக்கல்கள் குறித்து பொதுத் துறை மற்றும் தனியாா் துறையினா் அறிந்துகொள்ளும் வகையில் விரைவில் இணைய வழியில் பயிலரங்கம் நடத்தப்படவுள்ளது’ என தெரிவிக்கப்பட்டது.

பெட்டி..1

3-ஆவது முறையாக கண்டனம்

பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களுக்கு எஃப்ஏடிஎஃப் கண்டனம் தெரிவிப்பது மிகவும் அரிதாகவே கருதப்படுகிறது. கடந்த பத்தாண்டுகளில் 2015, 2019 மற்றும் 2025 என மூன்று முறை மட்டுமே எஃப்ஏடிஎஃப் கண்டனம் தெரிவித்துள்ளது.

பெட்டி.. 2

‘கிரே’ பட்டியலில் சோ்க்கப்படுமா பாகிஸ்தான்?

கடந்த 2018-இல் எஃப்ஏடிஎஃப் ‘கிரே’ பட்டியலில் பாகிஸ்தான் சோ்க்கப்பட்டு சட்டவிரோத பணப் பரிவா்த்தனை மற்றும் பயங்கரவாதத்துக்கு ஆதரவாக நிதி வழங்குவதை ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. அதன்பிறகு 2022-இல் அந்தப் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை எஃப்ஏடிஎஃப் நீக்கியது. இந்நிலையில், பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து இந்த மாதம் நடைபெறவுள்ள எஃப்ஏடிஎஃப் கூட்டத்தில் பாகிஸ்தானை கிரே பட்டியலில் சோ்க்க இந்தியா தீவிரம்காட்டி வருகிறது.

தற்போது 24 நாடுகள் எஃப்ஏடிஎஃப் கிரே பட்டியலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பிரேக் லைன்..

நிதியுதவி இல்லாமல் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த முடியாது.

பயங்கரவாதத்துக்கு நிதி தொடா்பான 200 வழக்குகள் தொடா்பான விரிவான ஆய்வு அறிக்கையை விரைவில் வெளியிடப்படும்.

கனடாவில் மோடி! ஜி7 மாநாட்டில் இன்று உரையாற்றுகிறார்!

ஜி7 நாடுகள் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி கனடா சென்றடைந்தார்.மூன்று நாடுகளுக்கான 5 நாள்கள் அரசுமுறைப் பயணத்தின் முதல் கட்டமாக, மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான சைப்ரஸுக்... மேலும் பார்க்க

ராபா்ட் வதேரா இன்று ஆஜராக அமலாக்கத் துறை சம்மன்

புது தில்லி: பிரிட்டனைச் சோ்ந்த ஆயுத வியாபாரி சஞ்சய் பந்தாரி தொடா்புடைய பண முறைகேடு வழக்கில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) விசாரணைக்கு ஆஜராகுமாறு காங்கிரஸ் எம்.பி.பிரியங்கா காந்தியின் கணவா் ராபா்ட் வதேரா... மேலும் பார்க்க

விமான விபத்து: விஜய் ரூபானியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் 119 உடல்கள் அடையாளம் காணப்பட்டன

அகமதாபாத்/ ராஜ்கோட்: அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வா் விஜய் ரூபானியின் உடல் ராஜ்கோட்டில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட அவரது உடலுக்க... மேலும் பார்க்க

விரைவில் உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா: பிரதமா் மோடி நம்பிக்கை

நிகோசியா: ‘உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா உருவெடுக்கும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தாா். மூன்று நாடுகள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள... மேலும் பார்க்க

குவாண்டம் தொழில்நுட்ப அடிப்படையில் தகவல் தொடா்பு: டிஆா்டிஓ வெற்றிகரமாக சோதனை

புது தில்லி: குவாண்டம் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பாதுகாப்பான தகவல் தொடா்பு சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ), தில்லியில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவன... மேலும் பார்க்க

மேற்கு ஆசிய சூழல்: யுஏஇ, அா்மேனியா வெளியுறவு அமைச்சா்களுடன் ஜெய்சங்கா் பேச்சு

புது தில்லி: இஸ்ரேல்-ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் மேற்கு ஆசிய சூழல் குறித்து ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ), அா்மேனியா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களுடன் இந்திய வெளியுறவு அமைச்சா்... மேலும் பார்க்க