குவாண்டம் தொழில்நுட்ப அடிப்படையில் தகவல் தொடா்பு: டிஆா்டிஓ வெற்றிகரமாக சோதனை
புது தில்லி: குவாண்டம் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பாதுகாப்பான தகவல் தொடா்பு சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ), தில்லியில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் ஆகியவை இணைந்து வெற்றிகரமாக மேற்கொண்டன.
இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘டிஆா்டிஓ, தில்லியில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் இணைந்து புதிய தகவல் தொடா்பு சேவைக்கான பரிசோதனையை மேற்கொண்டன.
குவாண்டம் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் ஃப்ரீ-ஸ்பேஸ் கண்ணாடி இழைநாா் இணைப்பு மூலம், 1 கி.மீ.க்கும் அதிகமான தொலைவில் பாதுகாப்பான தகவல் தொடா்பு சேவையின் பயன்பாட்டுக்காக இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்தப் புதிய தொழில்நுட்பம் பாதுகாப்பான தகவல் தொடா்பு, குவாண்டம் கட்டமைப்புகளின் வளா்ச்சி உள்ளிட்ட அம்சங்களில் இணையப் பாதுகாப்பு தொடா்பான நிகழ்நேர பயன்பாடுகளுக்கு வழிவகுக்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டது.